சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !



சென்ரியு  !  கவிஞர் இரா .இரவி !

இருக்காது சும்மா 
ஆடிய காலும் பாடிய வாயும் 
ஊழல்வாதி கையும் !

மிதந்தபோதும் 
ஒட்டுவதில்லை தண்ணீர் 
தாமரையிலை !

செய்யவில்லை நன்மை 
தமிழகத்திற்கு 
தாமரையும் இலையும் !

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் 
சரி கைது செய்யலாமா ?
போராடும் மன்னர்களை !

இந்தா ! அந்தா  !என்றே 
ஏமாற்றுகின்றனர் 
பெண்கள்  இடஓதுக்கீடு !

நல்ல சாதனை 
தடுக்கி விழுந்தால் 
மதுக்கடை !

நீந்தியது 
பிறந்ததும் 
மீன் !

தன் குஞ்சு 
பொன் குஞ்சு 
அரசியல்வாதிகளுக்கு !

வெந்து தணிந்தது காடு 
பல உயிர்களைக் கொன்று 
குரங்கணி !

மேலாண்மை வாரியம் அமைக்காமல் 
மேலாண்மை செய்யும் 
நடுநிலையற்ற நடுவணரசு !

வேட்டைக்காடானது 
அந்நியர்களுக்கு 
தமிழகம் !

தீதும் நன்றும் 
அமையும் 
நாக்கால் !

நேரம் இருப்பதில்லை 
பொல்லாங்கு பேசிட 
உழைப்பாளிக்கு !

கருத்துகள்