படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி ! ஹைக்கூ ! கௌந்தி மு ! சென்னை !




படித்ததில் பிடித்தது. கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கௌந்தி மு ! சென்னை !

கூண்டில் புலி
சுதந்திரமாய்
மக்கள் கூட்டம் !

கோவில் கோபுரம்
மிதிபடுகிறது
மழை நீரில் பிம்பம் !

ஓட்டப்பந்தயம்
தோற்றுகொண்டே இருக்கிறது
மணிமுள் !

கல்லறை
தனித்துச்செல்கிறது
பயந்தவன் பிணம் !

மழைக்காலம்
சிதறிக்கிடக்கிறது
ஈசல் இறகு !

சுற்றிக்களைத்ததும்
விழுந்து விடுகிறது
பம்பரம் !

பேனாவிற்குள்
அடைப்பட்டு கிடக்கிறது
எழுத்துக்கள் !

வறண்ட நிலம்
பசுமையாய் இருக்கிறது
கருவேலம் !

பலசாலி முதுகு
கூன்வளைகிறது
தெருவில் பணம் !

கருத்துகள்