காற்று ! கவிஞர் இரா .இரவி !





காற்று !  கவிஞர் இரா .இரவி !


உணர்த்தியது 
ஆடி பிறந்ததை 
காற்று !  

தென்றல் மெல்லினம் 
புயல் வல்லினம் 
காற்று !  

பின்னிருந்து முன்னேற்றியது 
முன்னிருந்து தடுத்தது
காற்று !  

கிளைகளை மட்டுமல்ல 
மரங்களையும் முறிக்கும் 
காற்று !  

குப்பையும் 
கோபுரத்தில் 
காற்று !  

கோபுரக்  கலசமும் 
மண்ணில் 
காற்று !  

உயிரினங்கள் 
உயிர் வாழ
காற்று !  

பஞ்ச பூதங்களில் 
பெரிய பூதம்
காற்று !  

புல்லாங்குழல் 
இனிய இசை 
காற்று !  

சிறு  தீ 
பெருந் தீ யானது 
காற்று !

இல்லை உருவம் 
உண்டு ஆற்றல் 
காற்று !
 

நின்றது சுவாசம் 
வந்தது மரணம் 
காற்று !  

கருத்துகள்