தென்னாட்டுக் காந்தி காமராசர் ! கவிஞர். இரா . இரவி !




தென்னாட்டுக் காந்தி  காமராசர் ! கவிஞர். இரா . இரவி !


விருதுநகரில் பிறந்த விருதுக்காரர்
விவேகத்தில் சிறந்த திறமைக்காரர் !


கிராமங்கள் முழுக்க கால்பதித்தவர்
மனிதநேயத்தின் மறுஉருவமாக நின்றவர் !

தன்னிகரில்லா தமிழகத்தை உயர்த்திக்காட்டியவர்
தரணியில் நேருவின் பாராட்டைப் பெற்றவர் !


தன்னலமற்ற தலைவராக வாழ்ந்தவர்
பொதுநலத்தையே குறிக்கோளாக்க் கொண்டவர் !


ஏழைப் பங்காளன் என்பதற்கு இலக்கமாணவர்
ஏழைகளுக்கு இலவசக்கல்வி நல்கியவர் !


எளியவருக்கு மதிய உணவு வழங்கியவர்
கற்றவர்கள் ஏழு என்பதை முப்பத்தேழாக்கியவர் !


கல்விக்கூடங்கள் இருபத்தேழாயிரம் திறந்தவர்
விள்க்கேற்றி அறிவொளி தந்த முதல்வர்


ஏழைகளின் உயர்வுக்குச் சிந்தித்தவர்

வாழ்க்கையையே தியாகம் செய்தவர் !


கதராடை அணிந்த கறுப்புச் சட்டைக்காரர்
கொண்ட கொள்கையில் பிடிப்புக்காரர் !

இலட்சங்களுக்காக இலட்சியத்தை விடாதவர்
கோடிகளுக்காக கொள்கையை துறக்காதவர் !

தென்னாட்டு காந்தியாக விளங்கியவர்
சுயமரியாதை எங்கும் இழக்காதவர்!

சுதந்திரத்திற்காக போராடிய புரட்சிக்காரர்
பணத்தாசை பதவியாசை இல்லாதவர் !

பகைவர்களும் பாராட்டும் பண்பாளர்
படிக்காத மேதை காமராசர்!

மனிதரில் புனிதர் காமராசர் ! கவிஞர் இரா. இரவி !

கல்விப் புரட்சிக்கு வித்திட்ட வீரர் காமராசர் !
கல்விக்கூடங்கள் பல திறந்திட்ட மாமனிதர் காமராசர் !
மட்டற்ற கல்வியோடு மதிய உணவும் தந்தவர் காமராசர் !
மாடுமேய்த்த சிறுவர்களை பள்ளிக்கு வரவழைத்தவர் காமராசர்!
தொழில்புரட்சியை தொடங்கி வைத்தவர் காமராசர் !
தொழிற்சாலைகள் பல சொல்லும் பெயர் காமராசர் !
ஆடம்பரம் என்னவென்று அறியாதவர் காமராசர் !
அன்பால் மக்கள் மனங்களில் வாழ்பவர் காமராசர் !
பலர் பட்டம், பதவி பெறக் காரணமானவர் காமராசர் !
பதவிக்கு என்றும் ஆசைப்படாத இனியவர் காமராசர் !
படிக்காதமேதை நினைவாக பல்கலைக்கழகம்பெயர் காமராசர் !
படிக்காத போதும் பட்டறிவு மிக்கவர் காமராசர் !
ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்பவர் காமராசர் !
அப்படிச் சொன்னால் முடித்து விடுபவர் காமராசர் !
தொண்டனுக்கு செலவு வைக்க விரும்பாதவர் காமராசர் !
தொண்டர் வீட்டு திருமணம் திடீரெனச் சென்றவர் காமராசர் !
தென்னாட்டு காந்தியாக என்றும் திகழ்ந்தவர் காமராசர் !
வடநாட்டுப் பிரதமர்களை நியமனம் செய்தவர் காமராசர் !
பெரியாரின் கொள்கைகளைச் செயல்படுத்தியவர் காமராசர் !
பெரியாரால் பச்சைத்தமிழரெனப் பாராட்டப்பட்டவர் காமராசர் !
தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்தவர் காமராசர் !
தமிழகத்தை எல்லாத் துறையிலும் முன்னேற்றியவர் காமராசர் !
நேர்மையின் சின்னமாக விளங்கியவர் காமராசர் !
நாணயத்தின் சின்னம் மனிதரில் புனிதர் காமராசர் !
---------------------------------------------------------------------------
கற்றோர் போற்றும் காமராசர் ! கவிஞர் இரா .இரவி !

கற்றோரின் எண்ணிகையை  பன்  மடங்கு உயர்த்தியவர் !
கல்விச்சாலைகள் திறப்பதை தலையாய கடமையாகச் செய்தவர் !

மாடு  மேய்த்த சிறுவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தவர் !
மதிய உணவிட்டு கல்வி கற்றிட வழி வகை செய்தவர் !

தான் படிக்காவிட்டாலும் தமிழகத்தைப்  படிக்க வைத்தவர் !
தான் படிக்கட்டாக இருந்து பலரை உயர்த்தி விட்டவர் !

மருத்துவர்களும் பொறியாளர்களும் பெருகிடக் காரணமானவர் !
மாணவர்களுக்கு கல்வியின் மேன்மையை உணர்த்தியவர் !

கைநாட்டு வைக்கும் படிக்காத பாமரர்களின் குழந்தைகளுக்கு !
கல்வி மருத்துவக்கல்வி வழங்கிய மாமனிதர் அவர் !

சாத்திரம் சம்பிரதாயம் மூடத்தனம்  என்றும்  நம்பாதவர் !
சரித்திரத்தில் இடம் பெறும் வண்ணம் சாதனை நிகழ்த்தியவர் !

கதராடை அணிந்த கறுப்புச் சட்டைக்காரராக வாழ்ந்தவர் !
கட்டாயமாக அனைவரும்  கல்வி கற்க அறிவுறுத்தியவர் !

தன்னலம் கருதாது பொதுநலம்  பேணிய புனிதர் !
தமிழகத்தில் கல்விப்புரட்சிக்கு வித்திட்ட வல்லவர் !

ஒரு சாதிக்கு மட்டுமே சொந்தம் என்று இருந்த கல்வியை !
அனைத்து சாதிக்கும் சொந்தம் என்று ஆக்கிய அற்புதர் !

காமராசரால் கல்வி கற்று உயர் அதிகாரியானோர்   பலர் !
காலமான போதும் காமராசரை இன்றும் வாழ்த்துவோர் உளர் !

கல்வி வள்ளல் பட்டத்திற்குப்  பொருத்தமான ஒரே மனிதர் !
கோடிகளைச் சுருட்டுவோருக்கு இன்று  கல்வி வள்ளல் பட்டம்  !   

கல்வி எட்டாக்கனியாக இருந்தது எட்டும் கனியாக்கியவர் ! 
கற்றோர் போற்றும் காமராசர் ! கல்வி நேசர் !

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !
கவிஞர் இரா .இரவி !

குமாரசாமி சிவகாமிக்குப் பிறந்து சிறந்த குழந்தை
குழந்தைகளுக்கு கல்வியோடு உணவும் தந்த தந்தை

அன்னையைக் கூட சென்னைக்கு அழைக்காதவர்
அரசுப் பணத்தை வீணாக்க விரும்பாதவர் காமராசர்

நானிலம் போற்றிட தமிழகத்தில் ஆட்சிப் புரிந்தவர்
நேர்மையின் சின்னம் நாணயத்தின் மறுபெயர் காமராசர்

கல்விப் புரட்சி பசுமைப் புரட்சி தொழில் புரட்சி
புரட்சிகள் பல புரிந்த புரட்சியாளர் காமராசர்

அணைகள் பல கட்டி விவசாயிகளை வளர்த்தவர்
பாலங்கள் பல கட்டி மக்களைக் காத்தவர் காமராசர்

முதல்வர் பதவியில் பெருமைகள்சேர்த்து முத்திரைப் பதித்தவர்
முதல்வர்களில் முதல்வராய் திகழ்ந்தவர் காமராசர்

கருப்பு காந்தி என்று மக்களால் அழைக்கப் பட்டவர்
வெள்ளை உள்ளத்திற்குச் சொந்தக்காரர் காமராசர்

கதராடை மட்டுமே அவர் சேர்த்து வைத்த சொத்து
கல்வி கற்பித்ததால் கற்றவர்கள் யாவரும் சொத்து

குப்பனும் சுப்பனும் கல்வி கற்றது அவராலே
உயர் பதவிகள் பெற்றதும் காமராசராலே

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தியவர்
பெரியாரே நேசித்த பச்சைத் தமிழர் காமராசர்

உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை !
உனக்கு நிகர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை !
----------------------------------------------------------------------------------
அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர் காமராசர் !   
   
கவிஞர் இரா .இரவி !

வயலில் மாடு மேய்த்த சிறுவர்களிடம் 
வரவில்லையா ? பள்ளிக்கு என்று வினவினார் !

மாடு மேய்த்தால் சோறு கிடைக்கும் 
பள்ளிக்கு வந்தால் சோறு கிடைக்குமா ?

சோறு போட்டால் பள்ளிக்கு வருவாயா ?
சோறு போடுகிறேன் பள்ளிக்கு வா !

மதியஉணவு பள்ளிகளில் வழங்கிய வள்ளலார் !
மாணவர்களின் பசிப்  போக்கிய தாயுமானவர் !

மாட்டுக்குச்சிப் பிடித்த கரங்களில் எல்லாம் !
ஏட்டுப் புத்தகங்களை ஏந்திட வைத்தவர் !

படிக்காத பாமரர்களையும் படிக்க வைத்தார் !
பட்டங்கள் பதவிகள் பெறக் காரணமானார் !

எல்லோருக்கும் கல்வி  கிடைத்திடச் செய்தார் !
ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் நீக்கினார் !

சீருடை வழங்கி மாணவர்களை  ஓருடையாக்கினார் !
சின்னக்குழந்தைகளின் மன வாட்டம் போக்கினார் !

மூடநம்பிக்கைகளை முற்றிலும் தகர்த்தார் !
முன்னேற்றப் பாதைகள் பல வகுத்தார் !

அழியாத செல்வம் அறிவுச்செல்வம் !
அற்புதக்கல்வியை வழங்கிய கல்விவள்ளல் !

மருத்துவர் பொறியாளர் பெருகிடச் செய்தார் !
மக்களின் நலனை உயிர்மூச்சாகக் கொண்டார் !

அனைவரின் நெஞ்சத்தில் வாழ்கிறார் காமராசர் !
அகிலத்தில் காமராசருக்கு  இணை காமராசரே !

அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த 
அருந்தமிழர் காமராசர் !  
  ------------------------------------------------------

பெரியார் போற்றும் பெருந்தமிழன் காமராசர் !
கவிஞர் இரா. இரவி!

கதராடை அணிந்திட்ட கருப்புச் சட்டைக்காரர் என்று
காமராசரை அன்று  சிலர் சொன்னதுண்டு !

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்
பெருமளவு பள்ளிகளை திறந்து வைத்தார் !

மேட்டுக்குடிக்கு மட்டும் என்றிருந்த கல்வியை
மாடு மேய்ப்பவருக்கும் பொதுவாக்கிய மேய்ப்பர் காமராசர் !

பொறியாளர்களும் மருத்துவர்களும் தமிழகத்தில்
பெருகிட காரணமாக இருந்தவர் காமராசர் !

கல்வி வள்ளல் என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்
கல்வி அதிகம் கற்காவிட்டாலும் அருமை அறிந்தவர் !

படிக்காத மேதையாக வாழ்வில் சிறந்தவர்
படிக்காதவர் பெயரில் பல்கலைக்கழகம் உருவானது !

நேர்மையின் சிகரமாக வாழ்ந்து காட்டியவர்
நாணயத்தின் இலக்கணமாக வாழ்ந்து சிறந்தவர் !

மாட மாளிகை கூட கோபுரம் வெறுத்தவர்
மண்வாசனை மாறாமல் வாழ்ந்திட்ட சித்தர் !

ஆசையை அறவே அழித்திட்ட புத்தர்
அன்பால் அனைவரின் உள்ளம் நிலைத்தவர் !

கல்விச் சாலைகள் மட்டுமல்ல ஆலைகளும் திறந்தவர்
கல்வியை தமிழகத்தில் வெள்ளமாகப் பாய்ச்சியவர் !

மாலை நேரக் கல்லூரிகளும் திறந்திட்டவர்
மனதார மக்கள் பாராட்டும்படி தமிழகம் ஆண்டவர் !

அன்னையே கேட்ட போதும் முப்பது ரூபாய்
அதிகம் வழங்கிட சம்மதம் தராதவர் !

ஏழைகளின் இன்னலை என்றும் அறிந்தவர்
இன்னல் நீக்கிட திட்டம் தீட்டியவர் !

மூட நம்பிக்கைகளை முற்றாக வெறுத்தவர்
மூளையை பகுத்தறிவுக்கு நன்கு பயன்படுத்தியவர் !

பெரியார் எளிதில் யாரையும் பாராட்ட மாட்டார்
‘பச்சைத் தமிழர்’ என்று காமராசரைப் பாராட்டினார் !

காமராசரின் ஆட்சிக்கு துணை நின்றவர் பெரியார்
பெரியாரின் கொள்கைக்கு துணை நின்றவர் காமராசர் !

கருத்துகள்