படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
ஓவியரின் கை வண்ணத்தால்
மாறியது பூச்செடி
மங்கையின் சிகையாக !
வீட்டுக்கொரு
மரம் வளர்ப்பது
அறம் !
பூக்களை பறிக்காதீர்
பார்த்து ரசியுங்கள்
பரவசம் உம் வசம் !
சுண்டி இழுக்கும்
சுவர் ஓவியம்
வாழ்க ஓவியன் !
வல்லவனுக்கு
செடியும்
சிகைதான் !
கருத்துகள்
கருத்துரையிடுக