நன்றி .தினமணி கவிதைமணி இணையம்


அரியாசனம் !  கவிஞர் இரா .இரவி !

By கவிதைமணி  |   Published on : 20th February 2017 03:53 PM  |   அ+அ அ-   |  
உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு 
உருக்குலைந்து வருவது வேதனை !
 
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே 
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
 
அறம் மறந்து  அறிவிலி ஆகின்றான் 
ஆசைப் பிடித்து நாளும்  அலைகிறான்!
 
மனிதன் என்பதை மறந்து துளியும் 
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
 
எப்படியும்  அரியாசனம் அமர்வதே 
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
 
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு 
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
 
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான் 
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான் 

வாக்களித்த மக்களே வெறுக்கும்படி 
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
 
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார் 
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
 
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்