காதலர் தினம் ! கவிஞர் இரா .இரவி !

காதலர் தினம்  !     கவிஞர் இரா .இரவி !

காதலர்தினம் மட்டும் நினைப்பது 
காதலே அன்று !   

வருடத்தில் ஒரு நாள் 
நினைப்பதல்ல காதல் !

வாழ்நாள் முழுவதும் 
நினைப்பதே காதல் !

காதலித்த நாள் முதலாய் 
உயிருள்ளவரை நினைப்பதே 
காதல் !  

எண்ணம் முழுவதும் 
இனிதே நிரம்பி இருப்பதே 
காதல் !

அன்பு செலுத்துவதில் 
இருவருக்கும் போட்டி நடப்பதே 
காதல் !

ஒருவரை ஒருவர் யாரிடமும் 
விட்டுக் கொடுக்காததே 
காதல் !

இன்பம் துன்பம் இரண்டிலும் 
இணைந்தே இருப்பதே 
காதல் !

பிரித்தாளும் சூழ்ச்சிக்கு 
பலியாகாமல் இருப்பதே 
காதல் !

ஒருவருக்கு ஒருவர் 
அசைக்கமுடியாத நம்பிக்கையே   
காதல் !

புற அழகால் வருவதல்ல 
அக அழகால் வருவதே 
காதல் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்