படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

விரக்தில் வாழ்ந்தவனுக்கு 
வாழ்வின்  சுவை 
ஊட்டுகிறாள் !

ஈவு இரக்கம் 
மிக்கவை 
குழந்தைகள் !

இரு கைகள் இழந்தபோதும் 
இழக்கவில்லை 
நம்பிக்கை !

ஊட்டுகிறாள் 
அன்னையைப் போல 
சிறுமி !

உணவு மட்டும் 
ஊட்டவில்லை 
நம்பிக்கையும்தான் !

வாழ்கிறாள் வள்ளலார் 
குழந்தையின் 
வடிவில் !


கருத்துகள்