தினமணி கவிதைமணி !




-- 

அழுத கண்ணீர்: கவிஞர் இரா .இரவி 

By கவிதைமணி  |   Published on : 14th December 2016 07:20 PM  |   அ+அ அ-  |  
சென்ற வருடம் மழை வெள்ளம் வந்து 
சென்னையை அழ  வைத்தது !
இந்த வருடம் புயல் வேகமாக வந்து 
சென்னையை அழ  வைத்தது !
இயற்கையின்  சீற்றம்   கண்டபின்னும்  
இன்னும் திருந்தாமல் இருக்கலாமா ?   
மலைகளை   வெடி வைத்து தகர்த்து 
மலை போல கற்களை விற்பதை நிறுத்து !
மணலை ஆற்றில் அளவின்றி எடுத்து 
மண் வண்டியில் ஏற்றுவதை நிறுத்து !
நிலத்தடி நீரை மின்சாரக் கருவிகளால்
நிர்மூலம் ஆக்குவதை முதலில் நிறுத்து !
அளவிற்கு  மிஞ்சினால் அமுதமும் நஞ்சு 
அளவின்றி சிதைப்பதை உடன் நிறுத்து !
நானே பெரியவன் என்ற  அகந்தை அகற்று 
நானிலத்தில் இயற்கையே பெரிது உணரு ! 
இயற்கையை   நீ சிதைக்கச் சிதைக்க 
இயற்கை உன்னை  சிதைக்கும் உணர்ந்திடு !
அழுத கண்ணீர் போதும் இனி ஒருபோதும் 
அழக்கூடாது அன்புகாட்டு இயற்கையிடம் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்