பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு ! கவிஞர் இரா .இரவி !

பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !

உலகம் தோன்றியபோதே தோன்றிய 
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !

உலகின் முதல் மனிதன் பேசிய 
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !

பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து 
பாராட்டி மகிழ்ந்திடும்  மொழி தமிழ்மொழி !

மண் தோன்றும் முன்பே இந்த 
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !

திருக்குறள் என்ற இணையற்ற நூலை 
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !

காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி 
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !

தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது 
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !

ஆய்வாளர்கள்  அனைவரும் அறிவித்த மெய் 
அனைத்து மொழிகளின் தாய் தமிழ் மொழி !

காந்தியடிகளைக் கவர்ந்த மொழி தமிழ்
கடல் கடந்த புலம் பெயர்ந்தோர் பேசும் மொழி !

தமிழ்மொழி ஒலிக்காத   நாடே இல்லை 
தமிழ்மொழி ஒலிக்காத நாடு நாடே இல்லை !

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் 
பைந்தமிழ் இளமையாக புதுமையாக உள்ளது !

எந்த மொழியும் நம் தமிழ்மொழிக்கு 
ஈடு இணை இல்லை என்பது உண்மை !

உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம் 
ஒப்பற்ற தமிழுக்கு மகுடம் சூட்டுவோம் !

சங்கத்தமிழ் இன்றும் என்றும் நன்றே  வாழும் 
மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !

கருத்துகள்