நன்றி . தினமணி கவிதைமணி இணையம் !

நன்றி . தினமணி கவிதைமணி இணையம் !

http://www.dinamani.com/specials/kavithaimani/2016/dec/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2622159.html

-- 

சுனாமி சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

By கவிதைமணி  |   Published on : 26th December 2016 04:11 PM  |   அ+அ அ-   |  
அம்மா இருக்க  குழந்தை இறந்தது 
குழந்தை இருக்க  அம்மா இறந்தது !
குழந்தைகளை ஆதரவற்றோர் ஆக்கியது 
பெற்றோர்களை குழந்தையற்றோர் ஆக்கியது !
கொடுமைகள் சொல்லில் அடங்காது 
கொன்று மகிழ்ந்தது கொடிய சுனாமி !
எதிர்பாராத நேரத்தில் இடியாய் வந்தது 
எல்லோரையும் புரட்டிப் போட்டு விட்டது !
கடல்அலை ராட்சத பேரலையாய் வந்தது 
கண்டபடி வீசி அடித்துக் கொன்று மகிழ்ந்தது !
தூங்கியவர்களை நிமிடத்தில் பிணமாக்கியது 
தூரமாக நின்றவர்களை விரட்டிப் பிடித்தது !
இறுதிச்சடங்கிற்கு  சடலம் இல்லாமல் செய்தது 
இறந்தவர் பிழைத்தவர் தெரியாமல் போனது !
ஆடிய மனிதர்களின் ஆட்டம் நிறுத்தியது 
ஆட்டம்  இயற்கையிடம் செல்லாது அறிவித்தது  !
பலரது வீடுகள் இல்லாமல்  போனது
பலரது உடைமைகள் கடலுக்குள் போனது !
இன்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும்
என்று நினைத்தாலும் அச்சம் பிறக்கும் !   
இயற்கையின்  சீற்றம் எப்படி  உணர்த்தியது 
இயற்கையே பெரிது என்பதைக் காட்டியது !
சுனாமி சுவடுகள் பலரின் வாழ்வில் 
சோகம் தந்து வடுக்களாய் நிலைத்தது !
பஞ்ச பூதங்களை சிதைப்பதை நிறுத்து 
பஞ்சத்தில் ஆழ்த்திடுவோம் என உணர்த்தியது !   
இனி ஒரு சுனாமி வந்தால் இருக்காது உலகம் 
இனியாவது இயற்கை நேசிப்பை வழக்கமாக்குவோம் !
மனிதர்கள் மீது மட்டுமல்ல இயற்கையின் 
மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்திடுவோம் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்