தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

ஜன்னல்  நிலவு !  கவிஞர் இரா .இரவி !

அமாவாசையன்றும் தோன்றும் ஜன்னல்  நிலவு
அந்த எதிர் விட்டு நிலவிற்கு விடுப்பே இல்லை !
சூரியன் ஒளியை வானத்து நிலா பிரதிபலிக்கும் 
சுந்தரியின்   ஒளியை  சுந்தரன் பிரதிபலிக்கின்றேன் !
வானத்து நிலாவால் அல்லி மலர் மலரும்
வஞ்சி என்ற நிலாவால் நான் மலர்கிறேன் !

வானத்து நிலவோ தினமும் ஒரு வடிவம்
வஞ்சி அவளோ தினமும் ஒரே வடிவம் !

இரவில் மட்டுமே  தெரியும் வான் நிலா
பகலிலும் இரவிலும் தெரியும் நிலா அவள் !

முழு நிலவாய் என்றும் அழகாய்  ஒளிர்பவள்
முகத்தில் முகம் பார்க்கும் கண்ணாடி அவள் !

ஒரே ஒரு பார்வைதான் ஜன்னல் வழியே
ஒரு நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும் !

இதழ்கள் அசைத்து எதுவும் பேசாவிட்டாலும்
விழி வழி அனைத்தும் பேசி விடுகிறாள் கள்ளி !

சில நிமிட தரிசனம் கிடைக்காது போனால்
சிந்தை அது பற்றியே நினைத்து சோகமடையும் !

சிக்கி முக்கி  கற்கள் உரசினாள் தீ வரும்
செல்வியின் பார்வை உரசினாள் காதல் வளரும் !

மகிழ்ச்சியாக பார்வைக் கணை வீசினால்
மனசு மகிழ்ச்சியில் பொங்கி வழியும் !

விடுமுறையின்றி தினமும் வரும் ஜன்னல் நிலவு
வன்முறையின்றி என்னை வாழ வைக்கும் நிலவு !
--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்