தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! நெல்லுக்கு கிறைத்த நீர் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

நெல்லுக்கு கிறைத்த நீர்  ! கவிஞர் இரா .இரவி !

நெல்லுக்கு கிறைத்த நீர் வீணாவதில்லை 
நெல் மணிகளாக விளைந்து செழிக்கும் !

முப்போகம் கண்டா விவசாயம் இன்று 
முழுவதும் பொய்த்து ஒரு போகத்திற்கு வழியில்லை !

கர்நாடகமோ காவிரியைத்  திறக்க மறுக்கிறது 
கேரளமோ முல்லை பெரியாற்றில் உயர்த்திட தடுக்கிறது !

ஆந்திரமோ பாலாற்றின் குறுக்கே உயர்த்தி விட்டது 
அண்டை மாநிலங்கள் வஞ்சித்து மகிழ்கின்றன !

இரண்டு வெவ்வேறு நாடுகள் கூட தண்ணீரை  
இருவரும் அன்பாகப் பகிர்ந்து கொள்கின்றனர் !

ஒரே நாடான இந்தியாவில்  தண்ணீர் பகிர்வதில் 
ஒருவருக்கொருவர் எந்நாளும் சண்டை !

பகிர்ந்து உண்ணும் பழக்கம் புரியவில்லை 
படிக்கவில்லை ஒப்பற்ற நம்  திருக்குறள் !

வடக்கே ஆறுகளில்  வெள்ளம்  ஓடுகின்றன 
தெற்கே  ஆறுகள் பாலைவனம் ஆகின்றன !

ஒரே நேரத்தில் வெள்ளமும் வறட்சியும் 
ஒரே நாட்டில் வருவது முறையோ சிந்திப்பீர் !

நெல்லுக்கு இறைக்க தண்ணிர் தாருங்கள் 
நாளும் இரக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள் !

வீணாக்க கடலில் கலக்கும் தண்ணீரை 
விவேகமாகப் பயன்படுத்திட முன்வாருங்கள் !

இருக்கின்ற அணைகள் இந்தியாவிற்கு போதும் 
இனி புதிதாக யாரும் அணை கட்டக்  கூடாது !

விவசாயிகள் தற்கொலை நாடாதிருக்க வேண்டும் 
விவசாயிகள் மன மகிழ்வோடு வாழ வேண்டும் !

இமயம் முதல் குமரிவரை ஆறுகளால் இணைத்து 
இந்தியாவை வளமான நாடாக மாற்றுவோம் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்