படத்திற்கு கவிதை கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு கவிதை கவிஞர் இரா .இரவி !

நன்றி கவிஞர்பாப்பனப்பட்டு முருகன் .பாக்யா வார இதழ் 


சித்திரமும் கை பழக்கம் சரி 
செந்தமிழும் நா பழக்கம்
பேசுக !

வீட்டுக்கொரு மரம் 
வளர்க்க முடியவில்லை   
ஓவியத்தில் வளர்க்கிறான் மரம் !

குடிசை வீடு 
வரைத்து மகிழ்கிறான் 
மாளிகை !

வருங்கால அப்துல் கலாம் 
வரைந்துப் பார்க்கிறான் 
வானத்தைத் தரையில் !


.தரையில்
வரைந்து பழகுகிறான் 
வருங்கால ரவிவர்மா !

கருத்துகள்