ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !    கவிஞர் இரா .இரவி !

அம்பு இல்லா வில்லுக்கும் 
மதிப்புண்டு 
வானவில் !

பிரிய மனமில்லை 
பிரித்தது காற்று 
மரத்திலிருந்து இலை !

நதி நடந்ததால் 
பளபளப்பானது 
கூழாங்கல் !

சுமை அல்ல 
உயர உதவும் 
சிறகு !

பேசும் பேச்சை விட 
வலிமையானது 
மவுனம் !

பஞ்ச பூதங்களை 
கொள்ளையடிக்கும் பூதம்
மனிதன் !

எடுத்தால் திருட்டு 
நாமாக வழங்கினால் 
வரதட்சணை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்