நன்றி பாக்யா வார இதழ் ! படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

அம்மா கலங்காதே
அப்பா இல்லாவிடினும்
நான் காப்பாற்றுவேன் !

வேண்டாம் கண்ணீர்
வேண்டுகிறேன் அம்மா
துணையாக இருப்பேன் !

கள்ளம்கபடமற்ற பிஞ்சு
கணவனை இழந்த அன்னைக்கு
தருகின்றது ஆறுதல் !

ஓடிவிட்டார் அப்பா
ஒருபோதும் வருந்தாதேஇருவரும்
உழைப்போம் உயர்வோம் !

பேதலிக்க வேண்டாம்
பெண்ணாய்ப் பிறந்ததற்கு
சாதிப்போம் வா !

நீ அழுதால்
எனக்கும் வரும் அழுகை
வேண்டாம் சோகம் !

குடியால் மாண்ட அப்பா
கண்ணீர் விடுவதால்
வரப்போவதில்லை !

.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்