ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


மனத்தால் செதுக்கினான் 
உளியில் செதுக்கும்  முன் 
சிற்பி !


பன்னாட்டு மொழி பண்பாட்டு மொழி
உலகின் முதல் மொழி  
தமிழ் !

துன்ப இருள் நீக்கி 
இன்ப ஒளி தரும் விளக்கு 
திருக்குறள் !

அன்று சொன்னது அர்த்தம் உள்ளது 
இன்றும் நன்மை தருவது 
ஆத்திசூடி !

நல்வழி அறநெறி 
நான்கே அடியில் 
நாலடியார் !

பொய்க்கின்றன 
கற்பிதங்கள் 
அழகுதான் கருப்பும் !

உதட்டில் ஆன்மிகம் 
கண்களில் காமம் 
சாமியார் !

விவேகமன்று 
விளைநிலங்களில் 
கட்டிடங்கள் !

உருவம் இல்லை 
உணர முடிந்தது 
தென்றல் !

காண்பதும் பொய் 
நகரும் மரங்கள் 
தொடர்வண்டிப் பயணம் !

ஒற்றைக்கால் தவம் 
மீனுக்காக 
கொக்கு !

மழை கடல் மேகம்   
தொடர் பயணம் 
இயற்கை !

தெரிவதில்லை சுழல்வது 
கண்களுக்கு 
பூமி !

காட்சிப்பிழை 
நகரவில்லை 
சூரியன் !

நன்கு விளையும்
ஏர்முனை 
வலி தாங்கிய நிலம் !

சுமையானலும் 
பாதுகாப்பானது 
ஆமையின் ஓடு !
 
வராது ஓசை 
மீட்டாமல்
வீணை !

ஒலிக்காது 
தட்டாமல் 
மேளம் ! 

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்