நன்றி பாக்யா வார இதழ் ! அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

தலையில் கவலையை 
ஏற்றினால் விரைவில் 
எலும்புக் கூடாவாய் !

கோட்டை கொத்தளம் 
எதுவும் நிரந்தரமன்று 
நிலையாமையே வாழ்க்கை !

கயல்விழியால் 
கடைக்கண் பார்வையால் 
இந்நிலையோ ?

பரிணாம வீழ்ச்சி 
மனிதன் 
குரங்காகுகின்றான் !

மண்ணிற்கு இரையாகும் உடல் 
மனதினில் எதற்கு 
ஆணவம் ?

அழகி செய்த மாயமோ 
ஆடவன் நிலை 
இப்படி  ஆனதோ ?


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்