படம் பார்த்து எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !நன்றி பாக்யா வார இதழ் !

படம் பார்த்து எழுதிய  கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

அறம் செய்ய விரும்பு என்றால் 
அவ்வை நாம் மரம் நடுவதும் 
அறமே !

அம்மா அடிக்கமாட்டாள்
வேண்டாம் அச்சம்
செடியை நடு ! 

ஆடு மேய்ந்துவிடுமோ ? என 
அஞ்சாதே விதைத்திடு 
வேலி கட்டலாம்  !


மரம் நடுவோம் ! அளவோடு 
மழை பெறுவோம் !
மானுடம் காப்போம் !

வெப்பமயமாதலைத் தடுக்க 
விவேகமான வழி 
மரம் வளர்த்தல் !

வேண்டாம் சந்தேகம்
வளருமா ?  என்று 
வளர்ப்போம் நீர் விட்டு !

வருங்காலத் தலைமுறையும் 
வளமாக வாழ்ந்திட 
வளர்ப்போம் மரம் !

கருத்துகள்