படத்திற்கு கவிதை !கவிஞர் இரா .இரவி ! நன்றி பாக்யா கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் !

படத்திற்கு கவிதை !கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா கவிஞர் பாப்பனப்பட்டு முருகன் !

அரசியல்வாதிகளின் 
இருக்கை ஆசை 
உனக்கும் வந்ததோ ?

வாழ்வின் இன்பம் 
பெற்றோருக்கு உணர்த்திய 
பாலகனே வாழ்க !

உட்கார்ந்தே இருந்தால் 
சிலந்தியும் சிறை வைக்கும் 
எழுந்து நட !

ஓடி விளையாடு பாப்பா 
உனக்காகத்தான் பாடினான் 
உன்னத பாரதி !   

இருக்கையில் அமர்ந்திருக்கும் 
இனிய சந்திரனே  
நீ இருக்கையில் இல்லை கவலை !

என்ன பார்வை உந்தன் பார்வை
புன்னகை புரி 
வேண்டாம் சோகம் !

இறக்கிவிட யாருமில்லையோ ?
இறங்கு நீயே 
காயமின்றி வாழவில்லை !

முயன்று பார் 
முடியும் உன்னால் 
இறங்கி நட !

சும்மா இருப்பது 
சுகம்தான் 
சுகவீனம் வரவழைக்கும் !

சிம்மாசனத்தில்    
வீற்றிருக்கும் இளவரசே 
நாளை நீயே பேரரசு !

கருத்துகள்