படத்திற்கேற்ற கவிதை ! கவிஞர் இரா .இரவி !

.

படத்திற்கேற்ற கவிதை !  கவிஞர் இரா .இரவி !

தாயை இழந்த குழந்தை 
தவிக்குது தாய்ப்பாலுக்கு 
ஏக்கத்தோடு பார்க்குது 
ஆட்டுக்குட்டி பால் குடிப்பதை  ! 
---------------------------------------
ஆட்டுக்குட்டி விலகியதும் 
தான் அருந்தலாம் 
காத்திருக்கும் குழந்தை !
---------------------------------------------
ஆடே  உனக்குக் கூட அம்மா உள்ளது 
ஆனால் எனக்குதான் இல்லை அம்மா !
-------------------------------------
கொடிது வறுமை 
உண்ணாத காரணத்தால் 
அம்மாவிடம் இல்லை பால் !
ஆட்டுக்குட்டியே குடித்து விட்டு விலகு !
நானும் பாசியாறி விடுகிறேன் !
---------------------------------------------
ஆட்டுக்குட்டி பால்   அருந்தும் அழகை
அழகாய் அமர்ந்து ரசிக்குது 
அழகிய குழந்தை ! 
-------------------------------------
வறுமையிலும் பசியிலும் 
செம்மையான குழந்தை   !
ஆட்டுக்குட்டிக்கு முன்னுரிமை 
தந்து காத்திருக்கிறது !
------------------------------------------
ஆடே உன் குட்டிக்கு 
தந்தது போதும் !
அந்த குட்டிக் குழந்தைக்கும் 
கொஞ்சம் கொடுக்கலாமே !
----------------------------------------
பால் அருந்தும்  அழகை 
பாலகன் ரசிக்கிறான் !
-----------------
பால் அருந்தும் பயற்சியை 
ஆட்டுக்குட்டியிடம் கற்கின்றானோ ?
-----------------------------------

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்