தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி 240 நூல்களை நன்கொடையாக வழங்கினார்.

தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர்
இரா .இரவி 240 நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி நூலகத்திற்கு கவிஞர் இரா .இரவி தனது நூல்களையும் ,தான் மதிப்புரை எழுதிய நூல்களையும் மொத்தம் 240 நூல்களை நன்கொடையாக கல்லூரியின் பாதுகாப்பு அலுவலர் திரு,மகேஷ்வரன் அவர்களிடம் வழங்கினார் .தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி வலாற்று சிறப்பு மிக்க கல்லூரி .கவிக்கோ அப்துல் இரகுமான், கவியரசர் மேத்தா ,தமிழ்த் தேனீ இரா .மோகன் உள்ளிட்ட பல அறிஞர்கள் ,கவிஞர்கள் ,சான்றோர்கள் படித்த கல்லூரி .என் மூத்த மகன் பிரபாகரன் B.C.A படித்த கல்லூரி.எனது 10 ஹைக்கூ கவிதைகளை பாடத்திட்டத்தில் வைத்த கல்லூரி.பல சிறப்புகள் மிக்க கல்லூரிக்கு வழங்கியதில் மகிழ்ச்சி.




கருத்துகள்