ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !

வியர்ப்பதே இல்லை
எவ்வளவு ஓடினாலும்
எலி !

தொழில்நுட்பம் கற்பிக்கும்
குருவாகின்றான்
மகன் !

நேரமில்லை பொய்
மனமில்லை உண்மை
சாதிக்க ! 

அழுகுக்காடை  சுமக்க  வருத்தமில்லை
சுத்தாடை  சுமக்க கர்வமில்லை
கழுதை!

உலகில்
ஒருவருமில்லை
கவலையற்றோர் !

சிரிக்கின்றன
பிணத்தின் மீதிருந்தும்
மலர்கள் !

களவாடுகின்றான்
கதிரவன்
மலர்களில் பனித்துளிகள் !

எரிச்சலூட்டியபோதும் நன்றி   
உணவு கிடைக்கின்றது
விளம்பர இடைவெளி !

வன்மம்  கற்பிக்கும்
பாடசாலை
தொலைக்காட்சித் தொடர்கள் !

பூவே
பூ சூடியது
என்னவள் !

வேண்டவே வேண்டாம்
மிகக் கொடியது
கோபம் !

உடற்பயிற்சியின் இராசா
உடல்நலம் காக்கும்
நடைப்பயிற்சி !

வேண்டா வெறுப்பாக வேண்டாம்
விரும்பி செய்வோம்
விவசாயம் !

கல் சிலையானது
சிற்பியின்
சிந்தையால் !  

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்