நன்றி தினமணி இணையம் !

நன்றி தினமணி இணையம் !
http://www.dinamani.com/kavithaimani/2016/02/22/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5/article3290850.ece
-- 

ஏழ்மையின் எதிர்பார்ப்பு: கவிஞர் இரா .இரவி

By dn
First Published : 22 February 2016 10:49 AM IST
மாட மளிகை கூட கோபுரம் அல்ல
மண்ணில் வாழ சிறு வீடு போதும்  !
ஆடம்பர இராச உடைகள் அல்ல
அவசியமான சாதரண ஆடை போதும்  !
விண்ணில்  பறக்க விமானம் அல்ல
விலைவாசி கட்டுக்குள் இருந்தால் போதும்  !
அடிப்படைத் தேவைகளுக்கே போராட்டம்
அல்லும் பகலும் உழைத்தும்  போராட்டம் !
வாழ்வாதாரதிற்கு வகை செய்தால் போதும்
வாடி வதந்கிடத் தேவை  இல்லை !
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்
எல்லோரும் அவசியம் உழைக்க வேண்டும் !
தனியார் உடமைகள் பொது உடைமையாக வேண்டும்
தனி ஒரு மனிதனிக்கு உணவில்லை என்பது ஒழிய வேண்டும் !
கோடிகளில் கும்மாளம் இடுகிறது ஒரு கூட்டம் 
குடிக்க கூழ் இன்றி வாடுகிறது   ஒரு கூட்டம் !
எட்டடுக்கு மாளிகையில் வாழ்கிறது ஒரு கூட்டம்
எட்டுக்கு  எட்டு வீட்டில் வாழ்கிறது ஒரு கூட்டம்  !
ஒரு வேளை உணவு கூட இன்றி ஒரு கூட்டம்  !
ஊரின் உணவை ஒரு வீடு தின்னுது ஒரு கூட்டம்  !
ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டும்
எங்கும் சமநிலை பரவ வேண்டும் !
மனிதநேயம் பரவ வேண்டும்
மத வெறிகள் ஒழிய வேண்டும் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்