தினமணி இணையம் தந்த தலைப்பு ! ஏழ்மையின் எதிர்பார்ப்பு ! கவிஞர் இரா .இரவி !


தினமணி இணையம் தந்த தலைப்பு !

ஏழ்மையின் எதிர்பார்ப்பு ! கவிஞர் இரா .இரவி !

மாட மளிகை கூட கோபுரம் அல்ல
மண்ணில் வாழ சிறு வீடு போதும்  !

ஆடம்பர இராச உடைகள் அல்ல
அவசியமான சாதரண ஆடை போதும்  !

விண்ணில்  பறக்க விமானம் அல்ல
விலைவாசி கட்டுக்குள் இருந்தால் போதும்  !

அடிப்படைத் தேவைகளுக்கே போராட்டம்
அல்லும் பகலும் உழைத்தும்  போராட்டம் !

வாழ்வாதாரதிற்கு வகை செய்தால் போதும்
வாடி வதந்கிடத் தேவை  இல்லை !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்
எல்லோரும் அவசியம் உழைக்க வேண்டும் !

தனியார் உடைமைகள் பொது உடைமையாக வேண்டும்
தனி ஒரு மனிதனிக்கு உணவில்லை என்பது ஒழிய வேண்டும் !

கோடிகளில் கும்மாளம் இடுகிறது ஒரு கூட்டம் 
குடிக்க கூழ் இன்றி வாடுகிறது   ஒரு கூட்டம் !

எட்டடுக்கு மாளிகையில் வாழ்கிறது ஒரு கூட்டம் 
எட்டுக்கு  எட்டு வீட்டில் வாழ்கிறது ஒரு கூட்டம்  !

ஒரு வேளை உணவு கூட இன்றி ஒரு கூட்டம்  !
ஊரின் உணவை ஒரு வீடு தின்னுது ஒரு கூட்டம்  !

ஏற்றத் தாழ்வுகள் ஒழிய வேண்டும்
எங்கும் சமநிலை பரவ வேண்டும் !

மனிதநேயம் பரவ வேண்டும்
மத வெறிகள் ஒழிய வேண்டும் !

--


--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்