ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !

ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
முதுநிலைத் தமிழாசிரியர்,
புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி ,
மதுரை .


வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17.  பக்கங்கள் : 154, விலை : ரூ. 100 .
044-24342810. vanathipathippakam@gmail.


ஹைக்கூ தேனீ கவிஞர் இரா. இரவி!

ஹைக்கூ என்றவுடன் நினைவுக்கு வருபவர் கவிஞர் இரா. இரவி  அவர்கள் .உழைத்துக் கொண்டே இருக்கும் உன்னத மனிதர் ;நட்புக்கு
இலக்கணமானவர்   ;எதார்த்தமான சீரிய சிந்தனையாளர் .தமிழ் இலக்கியவாதிகளின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் "இனிய இளைஞன் " என்றே சொல்லலாம். ஹைக்கூ தேனை சேகரிக்கும் தேனீ முக்காலத்தையும் ஆராய்ந்து முன்னேற்றக் கருத்துக்களை தம் படைப்புகளில் முன் நிறுத்தக் கூடியவர் .நியாயமான  கருத்துக்களை யார் முன்னும் சுட்டிக்காட்டக் கூடிய நக்கீரர் .

நான் அதிகம் நேசிக்கும் எழுத்தாளர் என் இதய நண்பர் இரவியின்
15 வது நூல் "ஹைக்கூ முதற்றே உலகு"  இந்நூலினை புகழ் பெற்ற  வானதி பதிப்பகம் வெளியிட்டுருப்பது பொருத்தமானது .நூலினை மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார்கள் .
வானதி பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள் பல ..

இன்னொல்லின் பொருளடக்கத்தை வாசித்தவுடன் நூலின் முழுமையும் வாசிக்க செய்து விடுகிறது .
இந்நூலில் ஒட்டுமொத்த உலகத்தைத் தொட்டிருக்கிறார் .மனித உள்ளத்தை சுட்டிருக்கிறார் .
மனதைத் தொட்டதும் .. சுட்டதும் ..

மனித நேயத்தின்
மறுஉருவம்
கலாம் !

ஹைக்கூ மீசைக்காரர் இரவியின் ஹைக்கூ முதற்றே உலகு நூல் நூலகங்களில் மட்டும் இருக்க வேண்டிய நூல் அல்ல ;இல்லங்களில் இருக்க வேண்டிய நூல் !பள்ளி கல்லூரிகளில் தினம் ஒரு ஹைக்கூ வாக வாசிக்க வேண்டிய நூல் ! மாணவர்களுக்கு பரிசாக அல்ல பாடமாக வைக்க வேண்டிய நூல் .

பொற்குடத்திற்கு போட்டு இட்டது போன்று இளைஞர்களின்எழுச்சி நாயகன் முதுமுனைவர் வெ.இறையன்பு ,தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ஆகியோரின் தோரண வாயில் அம்சமாக அமைந்திருக்கிறது .

ஆண்டு நூறும் வாழ்க என
அருமை  நண்பர்  இரவியை வாழ்த்துகிறேன்



.


கருத்துகள்