புதியதோர் உலகு செய்தோம் ! கவிஞர் இரா .இரவி !

.

புதியதோர் உலகு செய்தோம் ! கவிஞர் இரா .இரவி !

புதியதோர் உலகு செய்தோம் அதில் !
புதுமைகள் பல செய்தோம்  !

உண்ணும் உணவில் புதுமை செய்தோம் !
துரித உணவு துரித சாவு என்றானது !

தோசை போய் பீசா புதுமை வந்தது !
தோன்றியது புதிய புதிய நோய்கள் !

இடியாப்பம் போய்  நூடுல்ஷ் புதுமை வந்தது
இடி விழுந்தது உடல் நலத்தில் !

ஆடைகளில் புதுமை செய்தோம் !
அலங்கோலம் அரங்கேற்றமானது !

மாடிக்கு மேல் மாடிகள் கட்டி புதுமை செய்தோம் !
மண்ணுக்குள் புதைந்தன மாடி வீடுகள் !

இருக்கும் வீட்டில் புதுமை செய்தோம் !
இடிந்து தலையில் விழுந்தது !

ஓடி விளையாடிய குழந்தைகளை !
ஓரிடித்தில் அமர்த்தி விளையாட வைத்தோம் !

வெள்ளைக்காரனை விரட்டினோம் ஆனால் !
வெள்ளையன் கற்பித்த மதுவை விரட்டவில்லை !

மாணவன் பள்ளி சீருடையோடு சென்று !
மது அருந்தும் அவலம் தொடர்கின்றது !

உலகமயம் என்று புதுமை செய்தோம் !
உயிர்களுக்கு உலை வைத்தது !

தாராளமயம் என்று புதுமை செய்தோம் !
தள்ளாட்டமானது பொருளாதாரம் !  

புதியதோர் உலகு செய்தோம் !
புதிது புதிதாய்  தீமைகள் செய்தோம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்