நன்றி . தினமணி நாளிதழ் இணையம் ! சுடும் நினைவுகள்: கவிஞர் இரா. இரவி

http://www.dinamani.com/kavithaimani/2015/12/21/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.-/article3187471.ece

 நன்றி  . தினமணி நாளிதழ் இணையம் !

சுடும் நினைவுகள்:

கவிஞர் இரா. இரவி

காதலில் வென்றால் திருமணத்தில் முடிந்தால்
கற்கண்டு நினைவுகள் நாளும் இனிக்கும் !
காதலில் தோற்றால் சுடும் நினைவுகள்
கனவிலும் நினைவிலும் பெரும் தொல்லை !

நடமாடும் நடைப்பிணமாய் நடமாட்டும்
நாள் நகருவது பெரும் போராட்டமாகும் !
மறந்து விடுங்கள் இரு சொல்தான் ஆனால்
மனதில் ஓராயிரம் முறை ஒலிக்கின்றது !

மறந்து விட்டதாய் உதடுகள் உரைக்கலாம்
மங்கையின் மனம் ஒரு போதும் உரைக்காது !
நீயே என் உலகம் என்று உரைத்தவள்
நீங்கினால் உலகின் ஒரு மூலையில் !

நம்மைப் பிரிக்க யாராலும் முடியாது     
நங்கை சொன்னாள் அவளே பிரிந்தாள் ! 
உடல் இரண்டு உயிர் ஒன்று என்று உரைத்தாள்
உடலின் உள் இருந்து உயிரை வதைத்தாள் !

கடல் அளவு உனைப் பிடிக்கும் என்றாள்
கடலில் தத்தளிக்க விட்டுச் சென்றாள் !
வான் அளவு உனைப் பிடிக்கும் என்றாள்   
வெட்ட வெளியில் விட்டுச் சென்றாள் !

வானும் நிலவும் போல நாம் என்றாள்
வஞ்சி வாட வைத்துச் சென்றாள் !
உயிர் வாழ்வதே உனக்காக என்றாள்
உயிர் உருக வருத்திச் சென்றாள் !

நினைவுகள் இரு வகை உண்டு
ஒளிரும் நினைவுகள் !
சுடும்  நினைவுகள் !

கருத்துகள்