படத்திற்குப் பாக்கள் !கவிஞர் இரா .இரவி !

பார்க்காமலே
கவர்ந்து இழுக்கின்றாய்
பார்த்தால் ?


நிலம் பார்த்தது போதும்
நிலவே
என்னைப் பார் !


பாவையின் பற்கள் தெரியாத
புன்னகையும்
பரவசம்தான்


வஞ்சி
வெட்கத்தைக்  கற்ப்பிக்கிறாள் 
கட்டணமின்றி  

இமை திறந்து பார்
வந்துவிட்டேன்
கனவு நாயகன் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்