படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

தனக்கு வெயில் பட்டாலும்
தன் குழந்தைக்கு படக்கூடாது
தாயுள்ளம் !

தன்னலம் கருதாது 
சேய்நலம்  கருதும்  
தாயுள்ளம் !

சேய் சுமையை
தாய் சுமக்கும் காட்சி
மாட்சி ! 

பிஞ்சு தாங்காது வெயில்
பாசத்தோடு குடை தாங்கும்
அன்னை ! 


முல்லைக்கு தேர் தந்தவன் மகள்
மகளுக்குக் குடை ஏந்தி
மகிழ்வோடு பயணம் !

பாடசாலைக்கு செல்லும்
பாசமகளுக்கு
நேசக் குடைபிடிப்பு !

ஆயிரம் உறவுகள்
பூமியில்  இருந்தாலும்
ஈடாகாது அன்னைக்கு ! 


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்