கலாம் ! கவிஞர் இரா .இரவி !


கலாம் ! கவிஞர் இரா .இரவி !

அகந்தை அறியாதவர்
அகிலம் அறிந்தவர்
கலாம் !

வாழ்வாங்கு வாழ்ந்தவர்
வையகம் போற்றியவர்
கலாம் !

கேள்வி கேட்டு பதில் வாங்கி
அறிவை விதைத்தவர்
கலாம் !

ஆசிரியர் மாணவர்
உள்ளம் வாழ்பவர்
கலாம் !

காவலர்களுக்கு குளிராடை தந்து
மகிழ்வித்த பேகன்
கலாம் !

தவறான மதிப்பீடுகளை
தவிடு பொடியாக்கினார் பொக்ரானில்
கலாம் ! 

அவர் மூச்சு மட்டுமே நின்றது
அவர் பற்றிய பேச்சு நிற்காது
கலாம் ! 

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்