உயிரோவியம் ! கவிஞர் இரா .இரவி !

உயிரோவியம் ! கவிஞர் இரா .இரவி !
ஓவியர் மாருதி வரைந்த
ஓவியம் அல்ல நீ !

காண்போரின் உள்ளதை
கள்ளி அடிக்கிறாய் கொள்ளை !

தூரியிகையால் வரைந்த ஓவியமல்ல
தூண்டில்  போடும் கண்கள் !

சிரிப்பில் சிதைந்து விடுகிறார்கள் !
சின்ன பின்னமாகி விடுகிறார்கள் !

மலர்ச்சியில் மலர்ந்து விடுகிறார்கள் !
மகிழ்ச்சியில் மெய்மறந்து விடுகிறார்கள் !

புருவம் அல்ல அவை பாவையின்
பார்வை அம்புகள் பாயும் வில் !

புகைப்படம் என்று நினைத்தே
பலர் ஏமாந்து   விட்டனர் !

இந்த அழகோ யாரோ ?
இவளை பெண் கேட்கலாமோ ?

அத்தை மகள் இவளோ ?
அநேகப்பேர் கற்பனை செய்தனர் !

இவள் என் காதலியாவளோ ?
என்று சிந்திக்க ஆரம்பித்தனர்  !

உயிரோவியம் கேள்விப்பட்டு இருக்கிறோம் !
உயிரோவியம் பார்த்து விட்டோம் !


கருத்துகள்