துளிப்பா ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

துளிப்பா ! ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மனிதரில் இல்லை
மலர்களிலும் இல்லை
உயர்வு தாழ்வு !

தேநீரெனப்   பருகினான்
கதிரவன்
மலர்களில் பனித்துளிகள் !

வேரிலிருந்து
பயணித்தது  
கிளைகளுக்கான சத்து !

குளத்தில்
தன் அழகை ரசித்தது
மரக்கிளை !

வருந்துவதில்லை
வெட்டிய வடுக்களுக்கு
பனைமரம் !

கிளைகள் வெட்ட வெட்ட
உயரம் வளர்ந்தது
பனைமரம் !

கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தந்தது
தென்னை !

வெளியே கடின  முள்ளாய்
உள்ளே இனிக்கும் சுளையாய்
பலா !

இவ்வளவு அழகாய்
பவளம் அடுக்கியது யாரோ
மாதுளம் பழம்!

காரணப்பெயர்
ஆறு ஐந்து சுளைகள்
ஆரஞ்சு !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்