குதிரை ! கவிஞர் இரா .இரவி !







குதிரை ! கவிஞர் இரா .இரவி !

கொம்புகள்  இல்லை !
யாரையும்   முட்டுவதில்லை !  

கொடிய கோரப் பற்கள் இல்லை    !
யாரையும்   கடிப்பதில்லை !

பிறரைத்   தாக்குவதில்
ஆற்றலை வீணாக்காமல் !

 தன் முன்னேற்றத்திற்கு மட்டுமே
ஆற்றலை செலவழிக்கும் !

ஆற்றல் விரயம் இல்லை !
முன்னோக்கிய பயணம்
மட்டுமே !

இயந்திரத்தின் அளவையும்
குதிரையின் ஆற்றல்
அளவால் சொன்னார்கள் !

குதிரையும் நமக்கு
கற்பிக்கும் பாடம் !

உண்ணவில்லை அசைவம் !
உண்பது சைவம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்