பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு . கேள்வி ! கவிஞர் இரா .இரவி !


பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு . 
கேள்வி ! கவிஞர் இரா .இரவி !

குழந்தைகள் கேட்டால் 
கோபம் வேண்டாம் 
அறிவாளியாவதன் அறிகுறி !

இந்த உலகம் 
உருவானது 
கேள்விகளால் !

எடிசனின் கேள்விகள் 
தந்தன 
எண்ணற்ற கண்டுபிடிப்புகள் !

தந்தை பெரியாரின் 
கேள்விகள் மலர்வித்தது 
பகுத்தறிவை !

எழுப்பியதால்தான் 
மக்கள் அறிந்தனர் 
சட்டமன்றத்தில் கேள்வி !

ஏன் ? எதற்கு ? எப்படி ?
எதனால் ? கேள்விகள் 
அறிவின் தொடக்கம்  !

புரட்சிகள் தொடங்கியது 
நல்வர்களின் 
கேள்விகளால் !

கேட்கக் கூடாது எனும்போது 
ஆரம்பமாகுது 
சர்வாதிகாரம் !  

கோபம் வரும் 
கேள்வியில் உள்ளது 
நியாயம் !

தேடலின் தொடக்கம் 
தேவைகள் தீர்க்கும் 
கேள்வி !

கேட்டால்தான் கிடைக்கும் 
விடையும் தீர்வும் 
கேள்வி !

விஞ்ஞானிகளின் கேள்விகளால் 
விளைந்தது 
நவீனம் !

வளைந்து இருக்கும் கேள்விக்குறி 
விடை வந்தால் 
ஆச்சரியக்குறி !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்