தகவல் இனிய நண்பர் முதுவை ஹிமாயத் .துபாய் !

தகவல் இனிய நண்பர் முதுவை ஹிமாயத் .துபாய் !

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட்ட தமிழக மாணவ, மாணவியர்

துபாய் :
துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். ஷார்ஜாவைச் சேர்ந்த பள்ளி மாணவி நிதயஸ்ரீ சங்கரன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொண்டார்.
அவருடன் மரக்கன்று நடும் விழாவில் திவ்யஸ்ரீ சங்கரன்,சுந்தரேஷ்,    ஆரன், கின்சுக், அட்விக், அஸ்வின், ரகிதா மற்றும் பிரசிதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மரம், செடி, கொடிகளை பாதுகாத்து இந்த கிரகத்தை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.




கருத்துகள்