செவிலியர் திலகம் அருணா ஷன்பாக் வாழ்கிறாள் ! கவிஞர் இரா .இரவி !


செவிலியர் திலகம் அருணா ஷன்பாக் வாழ்கிறாள் ! 
 கவிஞர் இரா .இரவி !

அகிம்சையாளர் காந்தியடிகளே ஒரு காலத்தில் ஆதரித்த
அந்த கருணைக் கொலை கூடாது என்பதின் குறியீடு நீ !
பலாத்காரம் செய்திட்ட மனித விலங்குக்கு
பாவத்தின் சம்பளம் ஆறு ஆண்டுகள் மட்டுமே.
சோகன் லால் பரதா வால்மீகி என்ற விலங்கு !
ஆறு ஆண்டுகள் சிறைவாசம் செய்த குரங்கு !
விடுதலையான போதும் ஒவ்வொரு நொடியும் !
அவனது மனசாட்சி தினம் தினம் கொல்லும் 
!
அவனை சாகடித்துக் கொண்டே இருக்கும் !
அவன் வாழ்ந்து வருவதே ஒரு தண்டனைதான் 
!
உன்னால் முடிவுக்கு வந்தது மனிதாபிமானமற்ற
மனிதநேயமற்ற கருணைக் கொலை !
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும் !
இறப்பு என்பதை வரவழைத்தால் கொலை தானே!
நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் கோமாவில் வாழ்ந்த
நங்கை நீ ஒருத்தி மட்டுமே !
அந்த வால்மீகி திருடனாக இருந்து திருந்தி !
அழகிய இராமாயணம் வடித்
தாகச் சொல்வார்கள்!
இந்த வால்மீகி திருட்டைக் கண்டித்ததற்காக
இவன் விலங்காக மாறி கொடூரன் ஆனான்!
அருணா உன் கதை நூலானது நாடகமானது !
அருணாவின் கதை கயவர்களை எச்சரிக்கப் பாடமானது !
இந்தியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு
இனி யாரும் நீதிமன்றம் செல்ல முடியாது !
உன்னால் முடிவுக்கு வந்த்து கருணைக் கொலை !
உன்னால் ஒரு முடிவு வந்தது கருணைக் கொலைக்கு !
காந்தி, தெரசா, புத்தன் வாழ்ந்த பூமியில் !
கருணைக் கொலை என்பதும் கொடூரக் கொலை தான்!
உயிருக்குப் போராடுகிறோம் என்பார்கள் !
உயிரோடு போராடியவள் அருணா நீ மட்டுமே !
பலாத்காரம் செய்திட்ட மனித விலங்குகளுக்கும் !
பலாத்காரம் செய்ய நினைக்கும் நடைப்பிணங்களுக்கும் !
உன் வாழ்க்கை நிகழ்வு எச்சரிக்கையாகும் !
உன் வாழ்வின் சோகம் உணர்ந்தால் திருந்துவார்கள் !
இருபத்தி நான்கு வயதோடு முடிந்த்து இன்ப வாழ்வு !
நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து துன்ப வாழ்வு !
பலாத்காரம் என்பது மனித செயலன்று மிருக குணம் !
பரவலாக உலகிற்கு உணர்த்தியது உன் மரணம் !
மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே !
மனித குலத்திற்கே உணர்த்தியது உன் மரணம் !
செவிலியர் பணி என்பது சிறப்பான பணி !
செவிலியர்களை ஒருங்கிணைத்து உன் துன்பம் ! 
கருணைக் கொலையும், கொலை தான் என்பதையும் !
கருணை என்னும் சொல்லை நீக்கியது உன் மரணம் !
உலகில் உயிரைப் பறிக்கும் அதிகாரம் துன்பம் !
உச்சநீதிமன்றத்திற்கும் இல்லை உணர்த்தியது உன் மரணம் ! 
மனிதரை மனிதர் கொல்லும் அவலத்திற்கு
மடமைக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது உன் மரணம் !
நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரித்தாள் !
திருட்டைக் கண்டித்த உன்னை சிதைத்தா
ன் வால்மீகி !
நீதிக்காக போராடியவர்கள் மரணிக்கலாம் !
நீதி மட்டும் என்றுமே மரணிப்பதில்லை !
கருணைக் கொலை முடிவுக்கு வந்தது நாட்டில் !
கொலையும் தற்கொலையும் ஒழியட்டும் நாட்டில் ! 
அருணா குற்றமற்றவள் என்பதால் மரணம் கூட
அருணாவை நெருங்கிட அஞ்சியது !
அருணாவே மரணத்தை வாவென அழைத்தால்
அருணாவே நெருங்கியது மரணம் !
அருணா உடலாய் உலகை விட்டு மறைந்திட்டாலும்
அருணா உலகத்தாற் உள்ளங்களில் என்றும் வாழ்வாள்.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்