ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கான விருப்பங்கள் 
படைப்பிற்கு கிடைப்பதில்லை 
முகநூலில் !

ஏமாற்றி  கறக்கின்றனர்     
இறந்த கன்று வைத்து 
பால் !

மீனவர் வலையில் மீன்கள் 
இலங்கைப்படை வலையில் 
மீனவர்கள் !

இதயத்தை இதமாக்கும் 
ஓசையின் ஒழுங்கு 
இசை !

ஓவியர் உள்ளம் 
ஓங்கி உரைக்கும் 
ஓவியம் !

எந்த ஓவியராலும் 
வரைய முடியாது 
குழந்தை  வரையும் ஓவியம் ! 

பராமரிப்பில் உள்ளது 
விளையாமல் போவதும் 
விதை விருட்சமாவதும் !

வெகு நாட்களாகி விட்டன 
நேர்மை விடைபெற்று 
அரசியல் !

தூரப்போனது 
தூய்மை 
அரசியல் !
.
வாசலில் விட்டு விடுகிறோம் 
கால்களைக்   காத்த போதும்
காலணிகள் !

வேலை தேடுவதே 
வேலையனாது 
வேதனையில் வாலிபர்கள் !

எளிமை 
எள்ளல் அன்று 
இனிமை !

ஆடம்பரம் 
நிரந்தரமன்று
ஆபத்தாகும் !

தமிழ்த் திரைப்படத்திற்கு
தமிழில் பெயர் வைக்க 
தமிழ்நாட்டில் வரி விலக்கு ?

பெயரில் மட்டும் தமிழ் 
பேசுவதெல்லாம் தமிங்கிலம் 
திரைப்படம் !

மூச்சுள்ளவரை இயங்கினால் 
மூச்சு நின்ற பின்னும் 
நினைக்கப்படுவோம் !  

பிறருக்காக வாழ்ந்தவர்களுக்கு 
வாழ்க்கை உண்டு 
இறந்த பின்னும் !

மகத்தானவை 
மனித உறுப்புகளில் 
விழிகள் !

காதலுக்கு முன்னுரை 
வரைபவை 
விழிகள் !

கண்டு பிடியுங்கள் 
காத்த சக்தி 
உள்ளது கண்களில் !

வேண்டாம் தயக்கம் 
உடன் பாராட்டுக 
பரவும் மகிழ்ச்சி !

இன்சொல் இனிது 
வன்சொல் கொடிது 
வள்ளுவர் மொழிந்தது !

முகம் மலர 
அகம் மலரும் 
இனிது இன்முகம் !

வேண்டாம் பொய் 
மாற்றுங்கள் பெயரை 
மக்களாட்சி ?

பொழுது மங்கியதும் 
பாதையில் விழுகிறான் 
குடிமகன் ?

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்