‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. வாழ்த்துரை : குமுதம் வார இதழ்

‘கவியமுதம்’



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
வாழ்த்துரை : குமுதம் வார இதழ்வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, 
தி. நகர், சென்னை-17.
பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பு(து)த்தகம்   !*****
கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின் – தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது.  சமூக அவலங்களை எதிருக்கும் ஒரு கலகக் குரல் கேட்கிறது.  மொழியின் ஆன்மா தெரிகிறது.  முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது.  காமராசரையும், பெரியாரையும், பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும் போக்க்கு தெரிகிறது.  காதலின் வலிமையும், மேன்மையும் தெரிகிறது. மொத்தத்தில் கவிதைகள் அனைத்திலும் கவிஞரின் உள்ளம் தெரிகிறது.

.

கருத்துகள்