மதுரை கம்பன் கழகம் சார்பில் அவ்வை விழாவும் பாரதி விழாவும் கோலாகலமாக நடந்தது ! கவிஞர் இரா .இரவி !



மதுரை கம்பன்  கழகம் சார்பில் அவ்வை விழாவும் பாரதி விழாவும் கோலாகலமாக நடந்தது !  கவிஞர் இரா .இரவி !


மதுரை கம்பன்  கழகம் சார்பில் அவ்வை விழாவும் பாரதி விழாவும் கோலாகலமாக நடந்தது .   14.12.2014 காலையில் ,சங்க இலக்கிய பாடல்களில் அவ்வை பாடிய அகம் பற்றி  .  தா .கு .சுப்ரமணியன்   அவர்களும் பேராசிரியர் இராசாராம் அவர்கள் சங்க இலக்கிய பாடல்களில் அவ்வை பாடிய புறம் பற்றி பேசினார்கள்  .

பாரதிபாஸ்கர் அவர்களை நடுவராகக் கொண்டு பாரதி பாடல்களால் மக்களால் மதிக்கப்படுவது பாஞ்சாலியா ? கண்ணம்மாவா ?என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது .

மாலையில் போட்டியில் வென்ற  மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது .அருட்செல்வர் சங்கர சீதாராமன் உள்ளிட்ட புரவலர்கள் கலந்து கொண்டனர் .
 கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்களின் இசையரங்கம் நடந்தது .இரவு 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் பாடல்களால்   பார்வையாளர்களை  மெய் மறக்க வைத்து   ஒருவர் கூட எழுந்து போகாத வண்ணம் ரசித்து கேட்டனர் .முழுவதும் தமிழ்ப் பாடல்கள் மேடுமே பாடியது தனிச் சிறப்பு .மகாகவி பாரதியின் பல பாடல்கள் பாடினார்கள் .பாலும் தெளி தேனும்  என்று தொடங்கி ,சில பக்திப்பாடல்களும் ,காணி நிலம் வேண்டும் ,காற்றினிலே வரும் கீதம் ,சின்ன சிறு  கிளியே கண்ணம்மா ,எத்தனை   கோடி இன்பம் வைத்தாய் , திராத விளையாட்டுப் பிள்ளை ,உலகிலே சாந்தி நிலவ வேண்டும் ,
கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்கள்    இசையரங்கம்  முடியும் நேரம் பார்வையாளர்  பகுதியில் அமர்ந்து இருந்த தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்களை நீங்கள் பேசுவதை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து இருக்கிறேன் .பேசுவதை நேரடியாக பார்க்க வேண்டும் வாழ்ந்துங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். .உடன் அவர்கள வாழ்த்துரை வழங்கினார். அனைவரையும் தன் வேறு உலகத்திற்க்கே அழைத்துச் சென்றார் என்றார் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி ,வாழிய செந்தமிழ் பாடி முடித்தார்கள் .அனைவரும் எழுந்து நின்று கரஒலி தந்து பாராட்டினார்கள் ..  பாடிய பாடல்கள் அனைத்தும்  தமிழ் ப்பாடல்களாக இருந்ததால் அனைவரும் பொருள் புரிந்து ரசித்தனர் .
மிருதங்கம் திருவாரூர் திரு.  வைத்தியநாதன் மிக அருமையாக வாசித்து கர ஒலி பெற்றார்கள் .

கலைமாமணி சுதா ரகுநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

கருத்துகள்

கருத்துரையிடுக