பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி !

பாவையின் பார்வை ! கவிஞர் இரா .இரவி ! 



சிக்கி முக்கி கற்களை 
உரசினால்தான் தீ வரும் !
கள்ளி அவள் 
கண்களால் பார்த்தாலே 
தீ வரும் !

இமைகள் கூட 
இமைக்க மறக்கின்றன
அவளைக் கண்டால் !

அவள் விழிகளிலிருந்து 
வரும் விசைகளால் 
ஆட்டம் காண்கிறது 
மனசு ! 

இதழ்கள் அசைத்து 
எதுவும் பேசவில்லை 
எல்லாம் பேசிவிட்டாள் 
விழிகளால் !

வேறு எங்கும் 
நான் கண்டதில்லை 
கரு விழிகள் நடனம் !

நோக்கும்போது 
நோகவில்லை 
நோக்காதபோது 
நொந்து போனேன் !

பாவையின் பார்வை 
பரவசத்தில் 
நேரம் கடப்பதை 
உணரவில்லை !

மேனி தீண்டல்
தேவையில்லை 
பார்வை சீண்டல் போதும் !

உற்றுப்பார்ததில் 
ஊட்டசத்தை
உணர்ந்தேன் !

விழி வழி 
இன்பரசம் 
அனுப்பும் கள்ளி 
.
இமைக்காமல் பார்க்கும் 
போட்டியில் 
வெற்றி அவளுக்கு 
வசமானது !
நான் தோற்றபோதும் 
மகிழ்ச்சி எனக்கு !

ஆயிரம் பேரோடு 
நான்  இருந்தாலும் 
அழகாக காண்கிறாள் 
அழகி !

தொலை தூரத்தில் 
நான்  இருந்தாலும் 
பார்வையால் துரத்திப் 
பிடித்து விடுகிறாள் !

கருத்துகள்