உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி !

உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ?  கவிஞர் இரா .இரவி !

தமிழ்மொழி போல சிறந்த  மொழி உலகிலில்லை !
தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை !

காப்பியமும் காவியமும் நிறைந்த மொழி தமிழ் !
கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் !

சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் !
சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் !

உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்தது !
உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் !

எழுத்துக்களுக்கு பற்றாக்குறை தமிழில் இல்லை !
எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க  வேண்டும் !

தமிழைத் தமிழாக மட்டுமே பேசுவோம் !
தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் !

மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் !
மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் !

தமிங்கிலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம் !
தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் !

ஊடகத்தில் தமிழை சிதைத்து வருகின்றனர் !
ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் !

ஆங்கிலேயர் ஆங்கிலத்தோடு தமிழ் கலப்பதில்லை !
தமிழர் மட்டும் தமிழோடு ஆங்கிலம் கல்ப்பதேன் ?
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்