மருத்துவர் யோகநாதன் தொகுப்பு நூலிற்காக தந்த தலைப்பு ! தமிழர்கள் வாழ்வில் வீரமா ? கல்வியா ? செல்வமா ? தமிழர்கள் வாழ்வில் உடனடித் தேவை பகுத்தறிவே ! கவிஞர் இரா .இரவி !

மருத்துவர் யோகநாதன் தொகுப்பு நூலிற்காக   தந்த தலைப்பு  !

தமிழர்கள்  வாழ்வில் வீரமா ? கல்வியா ? செல்வமா ?

தமிழர்கள்  வாழ்வில் உடனடித் தேவை  பகுத்தறிவே !  

கவிஞர் இரா .இரவி !

தமிழர்கள்  வாழ்வில் உடனடித் தேவை  பகுத்தறிவே !  
தமிழர்களிடம் இன்றைய அவசரத் தேவை பகுத்தறிவே !  

மூட நம்பிக்கைகளில் மூழ்கித்   தவிக்கின்றனர் !
முட்டாளை விட மிக மோசமாக   நடக்கின்றனர் !

சோதிடம் பார்த்து சோகம் கொள்கின்றனர் !
சோதனை வந்தால் சோர்ந்து விடுகின்றனர் !

பிராத்தனையிலேயே காலம் கழிக்கின்றனர் !
பிராந்தி குடித்து வாழ்நாளைக் குறைக்கின்றனர் !

ராசிக்கல் மோதிரத்திற்கு செலவு செய்கின்றனர் !
ராசிக்கல் அணிந்தே விபத்தும் அடைகின்றனர் !

  
ராசிபலன் பார்த்து வாழ்க்கை நடத்துகின்றனர் !
வாஷ்துபலன்  பார்த்து வளத்தை இழக்கின்றனர் !
 
அறிவியல் இமயம் அப்துல் கலாம் சொன்னார் !
ஆயிரம்  மைல்களுக்கு அப்பாலுள்ள  கிரகம் ஒன்றும் செய்யாது !

எனக்கு கடவுள் நம்பிக்கை  என்றுமுண்டு ஆனால் !
எங்கோ இருக்கும் கிரகத்தின்ஆதிக்கத்தில் நம்பிக்கையில்லை  !
  
எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எங்கு ?எதனால் ?கேட்டுப் பழகு !
எம் பெரியாரின் வழி பகுத்தறிவைப் பயன்படுத்திடு  !

ஒருபக்கம் பக்தி பரவசம் பெருகுது நாட்டில்  !
மறுபக்கம் கொலை கொள்ளை நடக்குது !

சாத்திரம் சம்பிரதாயம் பார்ப்பது  குறையவில்லை !
சந்தோசம்  மகிழ்ச்சியின்றி தவிப்பில் வாழ்கின்றனர் !

தமிழர்கள் வாழ்வில் பகுத்தறிவிற்கு வந்தது பற்றாக்குறை !
தமிழர்கள் வாழ்வில் வரட்டும் பகுத்தறிவுக்கு   நிறை !
 
-- 

கருத்துகள்