மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் .

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்.
ஒருங்கினைப்பாளார் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .
திரு .ஜோதி மகாலிங்கம் , ,திரு .ராஜேந்திரன்
திரு. ஜானகிராமன்,வாழ்த்துரை .வழங்கினார்கள்.

கவிஞர் கே .விஸ்வநாதன் ,
தன்னம்பிக்கை தொடர்பான கவிதைவாசித்தார் .


JC.S.M.அருள்நிதி பன்னீர்செல்வம் "வாழ்க வளமுடன்" என்ற தலைப்பில் தன் முன்னேற்றப்பயிற்சி அளித்தார்.

சாப்பிடும் போது அவசரமின்றி நிதானமாக ரசித்து, ருசித்து சாப்பிட்டால் நோய் வராது .சாப்பாடு சமைத்த இல்லத்தரிசியை பாராட்டுங்கள் .தினமும் எழுந்தவுடன் கண்ணாடி முன் நின்று உன்னை நான் விரும்புகிறேன் என்று சொல்லுங்கள். கடந்த கால கெட்டவைகளை நினைத்து நிகழ் காலத்தை வீணாக்காதீர்கள் . கவலைகளால் மூளையை நிரப்பாமல் காலியாக வைத்து இருங்கள் .பிறர் நம்மிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்பினால் நாம் முதலில் அன்பு செலுத்த வேண்டும் . இப்படி பல பயனுள்ள தகவல்கள் வழங்கி தன் முன்னேற்றப்பயிற்சி அளித்தார்.

திரு. சம்பத் நன்றி கூறினார் .திருவாளர்கள் கார்த்திகேயன் .அசோகா சக்கரவர்த்தி, .திருத்தொண்டி ,
இரமேசு குமார்,கிசாந்த் ,திருமதி சுவாதி ,மற்றும் சிபி கல்லூரி பணியாளர்கள் உள்ளிட்ட மதுரை தன்னம்பிக்கைவாசகர் வட்டத்தினர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .

--

கருத்துகள்