இணையத்தில் ஹைக்கூ திலகம் இரவி சாதனமா? சீதனமா? முனைவர் பேராசிரியர் ச .சந்திரா ! தமிழ்த் துறைத் தலைவர் !

இணையத்தில் ஹைக்கூ திலகம் இரவி சாதனமா? சீதனமா?



முனைவர் பேராசிரியர் ச .சந்திரா !
தமிழ்த் துறைத் தலைவர் !

neraimathi@rocketmail.com

          அன்று தமிழ் வளர்க்க, அதியமான் தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியைஔவைக்கு வழங்கி கடையெழுவள்ளல்களுள் ஒருவனானான்.இன்றோஇலக்கிய ஆர்வலர்களுக்கு இல்லம் தேடிவந்து தமிழ் இணையதளங்கள் 
கனியைவழங்கிச் செல்கின்றன. இளைய தலைமுறையினருக்கு  அறிவியல் தந்திருக்கும்அதிசய சாதனமே இணையம்.இயந்திரயுகத்தில் இலக்கியவாதிகளுக்கும்இலக்கியரசனை மிக்கவர்களுக்கும் கால இடைவெளி மற்றும் தூரஇடைவெளியைக்
குறைக்க வந்த தகவல் தொடர்பு சாதனமே தமிழ் இணையம்எனலாம்.
ஆறிலிருந்து அறுபதுவரை :        
         !ஏட்டில் படித்த நாளும்  போய்,புத்தகத்தைப் புரட்டிய காலமும் படிப்படியாய் மாறி,இன்று ஆறிலிருந்து அறுபதுவரை இணையத்தை நாடுவது நடைமுறையாகிவிட்டது.காலத்தின் ஓட்டத்தில் தமிழின் அவசியத்தை வளரும் தலைமுறையினர் புரிந்துகொள்ள,உலகின் பிறமொழிகளோடு தமிழ்மொழியும் ஈடுகொடுத்து நடைபோட,மொழிப்பற்றைப் பெருக்க-என பல்வேறு நற்பணிகளைச் செய்துவரும் ஒரு வியத்தகு சாதனமே இணையம்.

கவிக் களஞ்சியம்:.

          அன்றாடப் பணிகளால் மனம் அயர்ந்து, சற்றே இளைப்பாற எண்ணி தமிழ் இணையத்திற்குள் புகுந்தேன்.கண்ணிற்பட்டது கவிமலர்.காம். http://kavimalar.com/அத்தளத்தில் புதுக் கவிதை,ஹைக்கூ,நகைச்சுவைத் துணுக்குகள் என எண்ணற்ற படைப்புக்கள்.கவிமலரை உருவாக்கிய பிரம்மா யாரென உற்றுநோக்கினேன்.அம்மூலவர் யாரெனில் மதுரைக் கவிஞர் இரா.இரவி.தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் மதுரைப் பிரிவின் துணைஅதிகாரியாகப் பணியாற்றிவரும் இவர் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களிலும் உலா வருவதை அறிந்தேன்.கவிமலரோடு மேலும் மூன்று வலைதளங்கள் இவருக்கு இருப்பதும் தெரியவந்தது.இந்த நான்கு தளங்களும் முப்பத்தி நான்கு வலைதளங்களோடு இணைக்கப் பட்டிருப்பது வியக்கத்தக்க ஒன்றே.இன்னும் ஒரு ஆச்சிரியப்படத்தக்கச் செய்தி என்னவெனில், கவிஞர் இரா.இரவியின் கவிமலர்.காமைப் பார்வையிட்டவர்கள் ஐந்து  இலட்சத்திற்கும் மேலான இலக்கிய பிரியர்கள் என்பதே. http://www.cqcounter.com/?sts,summary,,,,malligai
இவையெல்லாம் ஒருபுறமிருக்க,தற்செயலாக தமிழ்த்தோட்டம் http://www.tamilthottam.in/f16-forum  எனும் இணையத்தைப் பார்க்க நேர்ந்தது.அதில் பெரும்பான்மையான இலக்கியப் பதிவுகளைச் செய்தமைக்காக  செவ்வந்தி எனும் சிறப்புப் பட்டம் பெற்றிருக்கும் செய்தியும் அறியமுடிந்தது.ஈகரை களஞ்சியம் 

எனும் தமிழ் இணையத்திலோ இவரது படைப்புக்கள் நிரம்பி வழிகின்றன.
எங்கும் எதிலும்:  
          எழுத்து.காமில்
 http://eluthu.com/user/index.php?user=eraeravi இவரது கவிதைகள் சிறப்புத்தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.தாளம்.நியூஸ்.காமிலோ இரா.இரவியின் நூல் விமர்சனங்களை வாசிக்க நேர்ந்தது.தான் ஒரு படைப்பாளியாக இருந்து பத்துக்கும் மேலான கவிதை நூல்களை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் பிறரது சிறந்த நூல்களுக்கான விமர்சனங்களையும் வாசகர் என்ற நிலைக்கு மாறி, எழுதி இணையத்தில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.இவரது ஒவ்வொரு விமர்சனமும் உணர்ந்து வாசிக்கப்பட்டு படைக்கப்பட்ட உன்னத விமர்சனமாகும்.படைப்பாளி தரமான நூலைப் படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நிறைகளோடு நூலில் குறையிருந்தாலும் அவற்றைச் சுட்டிக் காட்டவும் இரா.இரவி தவறுவதில்லை.
மதிப்புரையும் தொகுப்புரையும்:
                        இவரது படைப்புக்கள் நான் வாசித்தறிந்த வரையில் முப்பதுக்கும் மேலான தமிழ் இணையங்களில் பதிவு செய்யபட்டிருக்கின்றது.கவிதை, திறனாய்வு மட்டுமல்லாது தான் நேரில் சென்று கேட்டறிந்த பிரபலமானவர்களின் சொற்பொழிவின் தொகுப்புரையும் தமிழ் இணையங்கள் பலவற்றிலும் இவரால் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.மேலும் இலக்கிய ஆர்வலர்களின் வசதிக்காக இலக்கியக் கூட்டங்களுக்கான அழைப்பிதழ்களின் வழி தமிழ்.ஆத்தர்ஸ்.காமில்http://www.tamilauthors.com/  தவறாது அழைப்பு விடுப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு செய்தியாகும்.இதுபோல் நடந்து முடிந்த இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் முக்கிய நிகழ்வின் புகைப்படங்களும் கவிஞர் இரா.இரவியால் பல்வேறு தமிழ் வலைதளங்களில் https://plus.google.com/u/0/photos
பொருத்தப்பட்டிருப்பதும் அவரது தமிழியல் ஆர்வத்தை புலப்படுத்துகிறது.
ஈடு இணையுண்டோ?
         .                     கவிஞர் இரா.இரவியின் கவிதைகள் மூடத்தனத்தின்முதுகெலும்பை 
முறிக்க வருவன,பழமை மரபைச்சாடுவன,புதுமையைப்புகுத்துவன,தமிழின உணர்வைவெளிப்படுத்துவன,பெண்மையைப் போற்றுவன,இயற்கையை வியந்துபாடுவன,சமூக இழிநிலையைச் சுட்டிக்காட்டுவன-என சொல்லிக்கொண்டேபோகலாம்.தேசத்தலைவர்களின் பிறந்த நாள்,நினைவு நாள்,நடப்புச்செய்திஇவற்றையெல்லாம் மனதில் வைத்து அவ்வப்பொழுதில் இணையத்தில்கவிதைகளை மறவாது பதிவு செய்வதில் கவிஞர் இரா.இரவிக்கு ஈடு இணை
வேறு எவருமில்லை.
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு ஹைக்கூ:

     "தாயிருக்க சேய்
     சேயிருக்க தாய்
     சுனாமி!"

இயற்கையை வியத்தல்:

     "இயற்கை எனும் கவிஞன்
      வானம் எனும் தாளில்
      எழுதிய கவிதை வானவில்!"

ஆங்கிலத்திலும்துளிப்பாக்கள்:

Rainbow:
      "sweet verse
      written on skypaper
      By nature poet"  (    http://kavimalar.com/vh/enhycoo.htm  )

 அன்று முதல் இன்றுவரை கவிஞர்கள்:

திருவள்ளுவர்:
 "தமிழ் என்ற சொல்லைப் 
   பயன்படுத்தாமலேயே
   தமிழுக்கு மகுடம் சூட்டிய மாண்பாளன்" 

கவி சுரதா:

 "இவர் பாடாத உவமை இல்லை!
 இவர் பாடாத உவமை உவமையே இல்லை!"

அப்துல்கலாம்;

 "செய்தித்தாள் விற்றுப் படித்து
  தலைப்புச்  செய்தி ஆனவரே"

என்று மேனாள் குடியரசுத் தலைவரைப் பாடியதோடு அவரின்
அழைப்பின்பேரில் கலாமைச் சந்தித்து அவரின் பாராட்டுதல்களைப் 
பெற்றபெருமை கவி இரவிக்கு உண்டு.
கவிமலர்.காம் இதனை புகைப்படத்துடன்நிரூபணம் செய்கின்றது.    

கவி இரவி காலத்தோடு கைகோர்க்கும் திறம்:

    அணுகுண்டு போட்டனர்!
    புல்பூண்டு கருகியது!
    உயிர்கள் ஒழிந்தன!
    ஓய்வின்றி உழைத்தனர்.
    உச்சம் தொட்டனர்!
    சுனாமி வந்தது!
    சும்மா புரட்டிப் போட்டது!
    அணு உலை வெடித்தது!
    ஆருயிர்கள் மடிந்தன!
    இனியும் உழைப்பர்!
    உலகின் உச்சம் தொடுவர்!
    விதியை நினைத்து
    வீழமாட்டார் ஜப்பானியர்! (எழுத்து.காம்)

பெண்மைகுறித்த கவிதை:
  "பெண்ணைக் குறை சொன்னால் 
பொறுத்துக் கொள்வாள்!
   பெற்றோரைக் குறை சொன்னால் 
கொதித்து எழுவாள்!"                    "  (தன்னம்பிக்கை.காம்)
மனதார...
      தமிழ் இணையத்தின் 
எந்தவொரு வலைதளத்தில் புகுந்தாலும் கவிஇரா.இரவியின் படைப்புக்களைப்பார்க்க 
இயலும்.பெரும்பாலோர்க்கு வீடே உலகமாக இருக்க இரவிக்கோ இணையமே உலகமாக இருப்பது தெள்ளத்தெளிந்தஉண்மை. 

இடையறாத இவரது இலக்கியப்பயணத்திற்கு கிட்டிய பரிசே கலைமாமணி விக்கிரமன் விருது!அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ;சிறந்த வரலாற்று நாவலாசிரியர்;இலக்கிய பீடம் மற்றும் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியர் என்ற சொற்களுக்கெல்லாம் சொந்தக்காரராம் கலைமாமணி விக்கிரமன் பெயரில் வழங்கப்பெறும் விருதினைப் பெறவிருக்கும் கவிஞர் இரா.இரவிக்கு இணையதள வாசகர் என்ற முறையில் மனமார்ந்த வாழ்த்துக்கள்!பெறவிருக்கும் இவ்விருது அவருக்குபதினேழாவது விருது என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்று!.கவி இரவியின் பேரும் 
புகழும் அலைகடல்தாண்டி அகிலம் 
முழுதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

.



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்