இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

இந்தியா தோற்றதற்கு நன்றி ! கவிஞர் இரா .இரவி !

மட்டை விளையாட்டில் இலங்கையோடு !
மட்டமாக விளையாடித் தோற்றதற்கு நன்றி !

தோல்வி உண்மையா ?  பொய்யா ? என்பது !
தோற்றவர்கள் மட்டும் அறிந்த உண்மை !

ஒருவேளை பந்தையத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !
ஒருவேளை பணத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !

பார்வையாளர்களை முட்டாளாக்கி பிடித்த ! 
பந்தை தரையில் விட்டு  தோற்றமைக்கு நன்றி !  

ஒரு வேளை இந்தியா வென்று இருந்தால் !
இலங்கை விளையாட்டில் தோற்று இருந்தால் !

இஞ்சி தின்ன குரங்காக  சிங்களன்  மாறிடுவான் !
இனவெறி கொண்டு தமிழினத்தைத் தாக்கிடுவான் !

கோபத்தில் ஈழத்தில் தமிழர் உயிரை !
கொடூரன் பறித்துக் கொன்று இருப்பான் !

மூக்கு மேல் சினம் வந்து முட்டாள்  சிங்களன் !
முள்வேலி அப்பாவிகளை முடித்து இருப்பான் !

வெறி கொண்டு தமிழர்களை ஒழித்திடுவான் !
வேதனையை மீனவருக்குப் பரிசாகத் தருவான் !

தமிழக மீனவர்களையும் சுட்டு  வீழ்த்தி !
தண்ணீரில் தள்ளி விட்டு மகிழ்வான் !

தோற்ற கோபத்தில் காட்டுமிராண்டியாவான்  !
தேற்ற ஆளின்றி எம் தமிழர் வாடி நிற்பர் !

எல்லை தாண்டியதாகக் கைது செய்திடுவான் !
எம்தமிழர் வலைகளைக் கிழித்து எறிந்திடுவான் !

இலங்கையை இந்தியா  தோற்கடித்தபோது   !
இழந்து இருக்கிறோம் தமிழர் உயிர்களை !

மட்டை விளையாட்டு வீரகளுக்கு நன்றி !
மானம் போனாலும் உயிர்  மிஞ்சியதே !

கொடூரன் கோபப்படாமல் இருக்க இந்தியா !
கொஞ்சம் தோற்றுப் போனதற்கு நன்றி !

இப்போது  மட்டுமல்ல  கொடிய இலங்கையோடு !
எப்போது விளையாடினாலும் தோற்றிடுங்கள் நன்றி !

கொடூரனைத் தட்டிக் கேட்க நாதியில்லை !
கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க துணிவில்லை !   



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்