வருமான வரித்துறை ஆணையாளர் திரு.பரத் அவர்கள் ஆற்றிய உரை ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் இசைச் சங்கம் 39 ஆம் ஆண்டு விழா தொடங்கியது .அதில் வருமான வரித்துறை ஆணையாளர் திரு.பரத் அவர்கள் ஆற்றிய உரை ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

இங்கு எனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தலாம் என்று ஆங்கிலத்தில் எழுதி வந்தேன் .இது தமிழ் இசைச் சங்கம் 39 ஆம் ஆண்டு விழாஎன்பதால் தமிழிலேயே பேசுகிறேன் .பிழை இருந்தால் மன்னியுங்கள் .எனக்கு தாய்மொழி மலையாளம் .

இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் இந்தியா தாண்டி மலேசியா ,சிங்கப்பூர் ,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பேசப்படும் மொழி தமிழ் .

உலகில் உள்ள எந்த ஒரு இலக்கியமும் தமிழில் உள்ள திருக்குறளுக்கு ஈடாக முடியாது .

கலையில் சிறந்தவர்கள் தமிழர்கள் .

ஸ்ரீ வில்லிபுதூர் கொபரம் போன்று எங்கும் பார்க்க முடியாது .

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிலைகள் போல வேறு எங்கும் காண முடியாது .

இட்லி தமிழர்களின் உணவு இன்று உலகம் முழுவதும் விரும்பிடும் உணவு .உலகம் முழுவதும் கிடைக்கின்றது

தமிழர்களின் உயர்ந்த பண்பாடு உலகம் வியக்கும் பண்பாடு
.
தமிழ் இசை வளர்க்கும் இந்த சங்கத்திற்கு பாராட்டுக்கள் 

கருத்துகள்