ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .


ஆயிரம் ஹைக்கூ !

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிபாரதி மு .வாசுகி ,மேலூர் .

வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. 
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

மதிப்பிற்குரிய கவிஞர் இரா .இரவி அவர்களின் ஆயிரம் ஹைக்கூ புத்தகத்தை படித்த எனக்கு விழியுலகத்திற்குள்  வெளியுலகம் அனைத்தையும் கண்டு விட்ட உணர்வு மேலோங்கியது .

சொத்துக்களைவிட 
சிறந்தவர்கள் 
நண்பர்கள் !

இந்த வரிகள் இரா .இரவி அவர்களை உலகத்திற்கு காட்டும் முகவரிகள் .

சும்மாயிருப்பதாய் அறிமுகம் 
அனைத்து வேலைகளையும்  
செய்யும் அம்மா !

இதில் அனைத்துத் தாய்மார்களின் ஆதரவைப் பெற்றுவிடுவார். அத்தனை யதார்த்தமான உண்மை .

ஒருவரின் பிரதிநிதியாக மட்டும் இவர் எழுதவில்லை .உலகில் ஒவ்வொருவருக்கும் தன்னை பிரதிநிதியாக  பிரதிபலித்து இருக்கிறார்.
 
வள்ளுவரை வாசுகியின் கணவராகவும் வாசகர்களின் கண்ணாகவும் பேசியிருப்பது இதுவரை எவரும் சொல்லாத தனி நடை அறிவிப்பு .

நீளம் சக்கரமானது 
தொட்டால் சுருண்டது 
ரயில் பூச்சி !

பார்வைக்கும் உற்று நோக்குதலுக்கும் உள்ள வேறுபாடுதான் சொற்களுக்கு அழுத்தத்தையும் ,ஆழத்தையும் கொடுக்கக முடியும் எனபதை உறுதிப் படுத்திய வரிகள் இது .

புகைபிடிக்கின்றது 
மலை 
பனி மூட்டம் !

என்ன அழகான ரசனை ! ஓர் கவிஞனின் ரசனைதான் மொழிக்கு அழகு சேர்க்கும் என்பதை உணர்த்தியது .

ஆயிரம் இருக்கிறது ! இன்னும் 330 எங்கே ?
இது மூன்றுவரி இரவிக்குறள்    !

ஆயிரம் அழகு ! அதில் இயற்கைச் சித்தரிப்பு பகுதியின் கற்பனை கலப்பு இயற்கைக்கு மகுடம் சூட்டியது போல் உள்ளது .

தாஜ்மகாலைப் பார்த்து சாதாரண தரை எதை வெளிப்படுத்த முடியும் ?
வியப்பைத் தவிர !

கவிஞர் இரா .இரவி எனும் ஆல மரத்திற்கு உலகளவில் விழுதும் விருதும் கிடைக்க வேண்டிக் கொள்ளும் அருகம் புல்! 
 



கருத்துகள்