அன்பென்ற மழையிலே ! நூல் ஆசிரியர் கவிஞர் நா .முனியசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்பென்ற மழையிலே !



நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி !

நூல் விமர்சனம் கவிஞர்   இரா .இரவி !

வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668
kavignareagalaivan@gmail.com

பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களின் பதிப்புரையில் நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி அவர்களைப் பற்றி எழுதிய வரிகள் அவருக்கு உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் , சிந்தனையில் குறை இல்லை என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளன .

" இளம் படைப்பாளியான நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி அவர்களின் முதல் கவிதை நூலான அன்பென்ற மழையிலே !அன்பின் பெருமைகளையும் , உலகியலின் அருமைகளையும் எடுத்தியம்பும் நல்ல நூலை எங்கள் வாசகன் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டு அவரின் அளப்பரிய திறமைகளை உலகறியச் செய்வதில் அகமகிழ்கிறோம் ."

கவிஞர் ஆங்கரை பைரவி அவர்களின் அணிந்துரை நன்று .சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

"எறும்புகள் குளிக்கும் படித்துதுறைதான் .இந்தத் தூறல் பெரு மழையாகி நம் எல்லோரையும் நனைக்கும் அதற்கான ஆர்வம், முயற்சி கவிஞரிடம் இருக்கிறது .வாழ்த்துகிறேன் நானும் ." 

போர் இன்றி உலகம் மிக மிக அமைதியாக இருக்க வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம் . நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி விருப்பமும் அமைதிதான் .

யுத்தம் இல்லாத 
ரத்தம் சிந்தாத 
உலக வாழ்வினை 
அன்பில் மலர்ச் செய்..
அனைத்தையும் மகிழச் செய் 
அமைதியாய் வாழச் செய் 
இதற்கென
இனியதைச் செய்திடு 
எப்போதும் 
தப்பேதும் இல்லாது .
மனிதன் உயர் திணை என்ப்று உயர்வாக எண்ணுகிறோம் .ஆனால் சில மனிதர்கள் சில நேரங்களில் விலங்கை விட மோசமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம் .
இயற்கையில் 
வேறுதுவும் 
உன்னைப் போல 
இன்னொரு உயிரை 
அழிக்க நினைப்பதில்லை  .
அழச்செய்வதில்லை .
உயர்ந்த படைப்பான
நீ மட்டும் ஏன்
இந்த இழிந்த 
செயலைச்   செய்கிறாய் ?
.உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின்  திருக்குறளை வழிமொழிந்து வரைந்த கவிதை நன்று .
இனியவற்றை 
எல்லாவற்றிக்கும் 
பகிர்ந்து கொடு .
அதில்தான் 
மணக்கிறது 
மனிதப்பண்பாடு !

இரும்பு  கூட பயன்படுத்தாவிட்டால் துரு பிடித்துவிடும் .மனிதன் உழைக்க வில்லை என்றால் மனிதனே  அன்று என்று உணர்த்தும் கவிதை நன்று .

உண்மையான 
உழைப்பில்தான் 
உன்னதமான 
வாழ்வு மலர்கிறது .

கடமையை நேசிக்க சொல்லும் விதம் அருமை .
கடமையில் இன்றிய இளைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய  வைர வரிகள் . ஹைக்கூ வடிவில் நன்று .

கடமையில் 
காதல் கொள் 
காவியமாகும் வாழ்வு !

ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய வரிகள் நன்று.

இழிவான 
செயல்களால் 
மகிழ்வான 
வாழ்வைப் பெற முடியும் 
என எண்ணுபவர்களே 
முட்டாள்களில் 
முதன்மையானவர்கள் !

முயற்சி திருவினையாக்கும் திருக்குறளை மெய்பிக்கும் விதமான வரிகள் நன்று .

இடைவிடாது 
முயற்சி செய்வோர் 
அடைய முடியாதது 
எதுவுமில்லை  உலகில் !

வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் உண்டு .சாலை என்றால் மேடு பள்ளம் உண்டு .வாழ்வியல் கருத்துக்களை சித்தர் பாடல் போல தத்துவம் போல நன்கு எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

முட்களுக்கு நடுவே 
ரோஜா மலர்வது போல 
வருத்தங்களிலுடேதான் 
வாழ்க்கை மலர்கிறது
அழகாய் !

மொத்தத்தில் கவிதைகள் நேர்மறை சிந்தனை விதைக்கும் விதமாக அன்பை போதிக்கும் விதமாக மனிதநேயம் கற்பிக்கும் விதமாக அற்புதமாக உள்ளது .
நூல் ஆசிரியர் கவிஞர்  நா .முனியசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .

கருத்துகள்