தாய்மொழி தமிழே ! கவிஞர் இரா .இரவி !

தாய்மொழி தமிழே !     கவிஞர் இரா .இரவி !

உலகத்தமிழர் யாவருக்கும் தாய்மொழி தமிழே !
உணர்வில் கலந்த உன்னதமொழி  தமிழே !

உலகின் முதல்மொழி தொன்மையானது தமிழே !
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழே !

முத்தமிழில் முத்திரைப் பதித்து தமிழே !
முத்தாய்ப்பான இலக்கியங்கள் உள்ள தமிழே !

இணையத்தில் கொடி கட்டிப் பறக்கும் தமிழே !
எதற்கும் ஈடு கொடுத்து நிலைக்கும்  தமிழே !

பன்னாட்டு மொழியாக விளங்குவது தமிழே !
பார் முழுவதும் பரவியுள்ளது தமிழே !

எழுத்து பேச்சு வழக்கில் உள்ளது தமிழே !
எண்ணிலும் அன்றே உருவானது  தமிழே !

அன்றும் இன்றும் என்றும் வாழும் தமிழே !
அன்பை உலகிற்கு உணர்த்தும்   தமிழே !

ஒருவனுக்கு ஒருத்தி பயிற்றுவித்தது தமிழே !
ஒழுக்கத்தை உயிராக   உணர்த்தும்  தமிழே !

உலகப்பொதுமறையை தந்தது தமிழே !
ஒப்பற்ற காப்பியங்களை  வழங்கியது தமிழே !

மொழிகளில் சிறந்து உயர்ந்தது தமிழே !
விழிகளில் விருந்து படைப்பது தமிழே !

ஈடு இணையற்ற இனிமையின் சிகரம் தமிழே !
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம்  தமிழே !

உயிர்க்கு மேலாக மதிக்கும் மொழி தமிழே !
உலகிற்கு நெறியை உரைக்கும் மொழி தமிழே !

ஈழத்தமிழர்களின்  உயிர் மூச்சு தமிழே !
ஈழத்தமிழர்களின் இனிய உச்சரிப்பு  தமிழே !

உலக நாடுகள் முழுவதும் ஒலிக்கும் தமிழே !
ஒப்பற்ற தமிழ்மொழிக்கு  இணை  தமிழே !

எத்தனையோ மொழிகளில் இனிமை தமிழே !
எல்லோரும் விரும்பினால் செழிக்கும் தமிழே !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்